ஆர்.கே.நகர் தொகுதியில் பிரச்சாரம் செய்ய அதிரடி தடை...தேர்தல்  ஆணையம் உத்தரவு என்ன?

 
Published : Apr 08, 2017, 06:46 PM ISTUpdated : Sep 19, 2018, 03:07 AM IST
ஆர்.கே.நகர் தொகுதியில் பிரச்சாரம் செய்ய அதிரடி தடை...தேர்தல்  ஆணையம் உத்தரவு என்ன?

சுருக்கம்

Election commission restricted for campaign 10th onward at RK Nagar

ஆர். கே நகர் தொகுதியில், வரும் 12  ஆம் தேதியன்று தேர்தல்  நடைபெற  உள்ளதால், தீவிர  பிரசாரத்தில்  ஈடுபட்டுள்ள கட்சி வேட்பாளர்களுக்கு  பிரச்சாரம்  குறித்த  விதிமுறைகளை தேர்தல்  ஆணையம் வெளியிட்டுள்ளது .

அதன்படி, ஆர்.கே.நகர் தொகுதியில் வரும் 10ம் தேதி மாலை 5 மணி முதல், 12-ம் தேதி மாலை 5 மணி வரை பொதுக்கூட்டம், ஊர்வலம் நடத்தக்கூடாது என  தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது .

இதே போன்று, வரும் 10ம் தேதி மாலை 5 மணி முதல் 12-ம் தேதி மாலை 5 மணி வரை திரைப்படம், தொலைக்காட்சி, ரேடியோ, சமூகவலைதளங்களிலும்  எந்த  பிரச்சாரமும்  செய்ய  கூடாது  என  தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

தேர்தல்  பிரச்சாரம்  செய்ய  கால அவகாசம் இன்னும்  சரியாக  2 நாட்களே உள்ள  நிலையில்,  வேட்பாளர்களின்   பிரச்சாரம்  சூடு  பிடிக்கும் என  எதிர்பார்க்கப் படுகிறது .

ஏற்கனவே  பணபட்டுவாடா உள்ளிட்ட  பல  பிரச்சனைகள்  நடந்து வரும் நிலையில் , அடுத்து வரும் இரண்டு நாட்களில் ஆர்  கே நகரில் எந்தெந்த மாற்றம் வருமோ என்ற  எதிர்பார்ப்பு  கிளம்பியுள்ளது .
 

PREV
click me!

Recommended Stories

அதிமுக மாஜி எம்.எல்.ஏ மகனை தட்டித்தூக்கிய விஜய்..! தளபதி போட்ட 'சைலண்ட்' ஸ்கெட்ச்!
மதத்தின் பெயரால் உணர்வுகளை தூண்டினால் அவரிடம் கவனமாக இருக்க வேண்டும்... கிறிஸ்தவ விழாவில் ஸ்டாலின் பாவ எச்சரிக்கை..!