அதிமுக அரசை வீழ்த்த நினைப்பவர்கள் வீழ்ந்து போவார்கள்…எடப்பாடி பழனிசாமி ஆவேசம்….

 
Published : Aug 05, 2017, 08:54 PM ISTUpdated : Sep 19, 2018, 12:59 AM IST
அதிமுக அரசை வீழ்த்த நினைப்பவர்கள் வீழ்ந்து போவார்கள்…எடப்பாடி பழனிசாமி ஆவேசம்….

சுருக்கம்

edappadi palanisamy speech in perambalur

அதிமுக அரசை வீழ்த்த நினைப்பவர்கள் வீழ்ந்து போவார்கள்…எடப்பாடி பழனிசாமி ஆவேசம்….

ஜெயலலிதா  ஆத்மா இருக்கும் வரை  இந்த அரசை யாராலும் அசைக்க முடியாது என்றும், அதிமுக அரசை வீழ்த்த நினைப்பவர்கள் வீழ்ந்து போவார்கள்  என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

பெரம்பலூரில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, எம்ஜிஆர் அரசியலுக்கு வருவதற்கு முன்பே, மக்கள் சேவையை தொடங்கியவர் என கூறினார்.

எம்ஜிஆரின் சாதனைகளை புதிய தலைமுறையினரும் தெரிந்து கொள்ளும் வகையில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நடைபெற்று வருவதாக கூறினார்.

எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் தமிழகத்திற்கு கிடைத்த வரங்கள் என்றும், எதிர்கட்சிகள் பாராட்டும் வகையில் செயல்பட்டவர் ஜெயலலிதா என்றும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

அதிமுக தொண்டர்கள் தியாகத்துடனும், விசுவாசத்துடனும் செயல்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

ஜெயலலிதா  ஆத்மா இருக்கும் வரை  இந்த அரசை யாராலும் அசைக்க முடியாது என்றும், அதிமுக அரசை வீழ்த்த நினைப்பவர்கள் வீழ்ந்து போவார்கள்  என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

 

 

 

PREV
click me!

Recommended Stories

GEN Z வாக்குகளுக்கு குறிவைத்த திமுக! மா.செ.களுக்கு ஸ்டாலின் முக்கிய உத்தரவு! விஜய் ஷாக்!
சட்டமானது 'வி.பி. ஜி ராம் ஜி' மசோதா! எதிர்ப்புகளை மீறி ஒப்புதல் அளித்த குடியரசுத் தலைவர்!