தமிழக அரசுக்கு தேவையான நிதியை வழங்க மத்திய அரசு மறுப்பதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.பாஜக வின் எடுபிடி அரசு என்று எதிர்க்கட்சிகள் விமர்ச்சித்து வரும் நிலையில் எடப்பாடி மத்திய அரசை குறை கூறியிருப்பது ஆச்சர்யமாகத்தான் இருக்கிறது.
தமிழக அரசுக்கு தேவையான நிதியை வழங்க மத்திய அரசு மறுப்பதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.பாஜக வின் எடுபிடி அரசு என்று எதிர்க்கட்சிகள் விமர்ச்சித்து வரும் நிலையில் எடப்பாடி மத்திய அரசை குறை கூறியிருப்பது ஆச்சர்யமாகத்தான் இருக்கிறது.
சேலம் மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமயிலான அனைத்து துறை அதிகாரிகளுக்காக ஆய்வு கூட்டம் நடைபெற்றது.அப்போது பேசிய முதல்வர் பழனிச்சாமி.." தமிழகத்தில் கொரோனா கட்டுக்குள் இருப்பதாகவும் தேசிய அளவில் கொரோனா தடுப்பு நடவடிக்கையில் தமிழகம் முதன்மையான மாநிலமாக இருக்கிறது.மேலும், மத்திய அரசு இன்னும்
கொரோனா தடுப்புப் பணிக்குத் தேவையான நிதியைத் தரவில்லை என்று குற்றம்சாட்டினார்.தற்போது அமலில் உள்ள ஊரடங்கால் ஜிஎஸ்டி வருவாய் குறைந்துள்ள நிலையில் அதனை ஈடுகட்ட முயற்சிகள் மேற்கொண்டு வருதாகவும் தெரிவித்தார்.