1973 - ல் லேடிஸ் ஹாஸ்டலில் லைட் ஆப் பண்ணிட்டு என்ன நடந்துச்சின்னு ஸ்டாலினுக்கு தெரியும்! வில்லங்கத்தை கிளறும் எடப்பாடி! அதிர்ச்சியில் திமுக!

By Vishnu PriyaFirst Published Apr 11, 2019, 12:26 PM IST
Highlights

பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தை வைத்து கிட்டத்தட்ட  ஒரு மாசமாக அ.தி.மு.க.வை அவித்து, பொரித்து, வறுத்து, வதக்கிக் கொண்டிருக்கிறார் ஸ்டாலின். ஸ்டாலின் வீசிய இத்தனை நாட்டு வெடிகளுக்கு எதிராக எடப்பாடியார் வைத்த ஒரேயொரு டைம் பாம், டோட்டல் தி.மு.க.வையும் சைலண்டாக்கி இருக்கிறது. 
 

பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தை வைத்து கிட்டத்தட்ட  ஒரு மாசமாக அ.தி.மு.க.வை அவித்து, பொரித்து, வறுத்து, வதக்கிக் கொண்டிருக்கிறார் ஸ்டாலின். ஸ்டாலின் வீசிய இத்தனை நாட்டு வெடிகளுக்கு எதிராக எடப்பாடியார் வைத்த ஒரேயொரு டைம் பாம், டோட்டல் தி.மு.க.வையும் சைலண்டாக்கி இருக்கிறது. 

அது என்ன டைம் பாம்?..சமீபத்தில் கோயமுத்தூர் மாவட்டம் பொள்ளாச்சியில் அ.தி.மு.க. வேட்பாளருக்கு ஆதரவாக பிரசாரம் செய்த மேடையில், தி.மு.க.வை வெளுத்து வாங்கி பேசிய முதல்வர் “1973-ல் கோபாலபுரம் அருகே உள்ள ஒரு பெண்கள் கல்லூரியில் விழா நடந்தது. அன்றைய தினம் இரவு 7:30 முதல் 9 மணி வரை மின்சாரம் திட்டமிட்டு அணைக்கப்பட்டது. அந்த நேரத்தில் அங்கே என்ன நடந்தது என்பது ஸ்டாலினுக்கு நன்றாகவே தெரியும். நாட்டு மக்களுக்கும் நன்றாகவே தெரியும்.” என்று பழைய கதை ஒன்றை கிளறினார். 

எடப்பாடியாரின் இந்த திடீர் ஃபிளாஸ்பேக் பாய்ச்சலில், தி.மு.க.வினர் கிலியாகி, அப்செட் ஆகிவிட, அ.தி.மு.க.வின் இளம் நிர்வாகிகளோ ‘அப்படி என்ன நடந்தது அந்த கல்லூரியில் அன்று?’ என்று அக்கட்சியின் சீனியர் மோஸ்ட் வி.ஐ.பி.க்களை நச்சரிக்க துவங்கினர். 

ராயப்பேட்டை தலைமை கழகத்தில் கடந்த சில நாட்களாக பரபரப்பாக ஓடும் விவகாரம் இதுதான். இது பற்றி வெளிப்படையாக ஜூனியர்களுக்கு அந்த பழைய விவகாரத்தை விளக்கிய சீனியர் நிர்வாகி ஒருவர்...”தி.மு.க.வோட வாரிசு புள்ளிக்கும், அந்த காலேஜ் பொண்ணுங்களுக்கும் அங்கேயிருந்த ஒரு ஹோட்டல்ல வெச்சு உரசல் ஏற்பட்டிருக்குது. அதுல ஒரு பொண்ணு, பெரிய இடத்துப் பொண்ணு. பிரச்னை பெருசாகிட்டே போனதால ஒரு கட்டத்துல அது கட்சி தலைமைக்கே சிக்கலாச்சு. அவர் கூப்பிட்டு திட்ட, வாரிசும் ‘சரி பண்ணிடுறேன்’ன்னு கோபத்தில் சொன்னார். 

அந்த காலேஜின் ஹாஸ்டலில் விழா நடந்துச்சு. அந்த நேரத்தில் மின்சாரத்தை திட்டம் போட்டு அணைச்சுட்டு, உள்ளே சிலரோடு புகுந்தவர் பெரும் அராஜகத்தை செய்தார். போலீஸ் வரைக்கும் போன பிரச்னை அப்புறம் அமுக்கப்பட்டுச்சு.” என்று முடித்திருக்கிறார். 

ஆனாலும், ‘யார் அந்த தி.மு.க. வாரிசு? அந்த பெரிய இடத்து பொண்ணு யார்?’ அப்படின்னு எத்தனை டைம் கேட்டாலும் சீனியர் பதில் சொல்லவேயில்லை.

சரி, இந்த பழைய கதைக்காக ஸ்டாலின் ஏன் அப்செட் ஆகணும்? அப்படிங்கிறதுதான் அ.தி.மு.க. யூத் டீமின் கேள்வி.

click me!