சட்டசபையில் வெளிநடப்பு அல்லது குறட்டை விடுவதுதான் துரைமுருகனின் வேலை; அமைச்சர் நிலோபர் கபில்

First Published Sep 16, 2017, 3:30 PM IST
Highlights
Duraimurugan job is to walk out or slap in the assembly


சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்வார் அல்லது குறைட்டை விட்டு தூங்குவார் என்று எதிர்கட்சி துணை தலைவர் துரைமுருகன் மீது அமைச்சர் நிலோபர் கபில் கடும் விமர்சனம் கூறியுள்ளார்.

அண்ணாவின் 109 - வது பிறந்த நாள் விழா வேலூர் மாவட்டம், காட்பாடியில் கொண்டாடப்பட்டது. இது தொடர்பாக பொதுக்கூட்டம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த பொதுக்கூட்டத்துக்கு தொழிற்துறை அமைச்சர் நிலோபர் கபில் கலந்து கொண்டார்.
அப்போது பேசிய அவர், அண்ணாவால் கண்டெடுக்கப்பட்ட அற்புத மனிதர் எம்.ஜி.ஆர். என்றும் ஜெயலலிதா, எம்.ஜி.ஆரின் வழியில் ஆட்சி செய்து வந்தார் என்றும் கூறினர்.

ஆனால், காட்பாடி தொகுதி எம்.எல்.ஏ.வான துரைமுருகன், அதிமுக ஆட்சி பற்றி குறைகூறி வருகிறார்.

துரைமுருகன் அடிக்கடி சட்டசபையில் வெளிநடப்பு செய்வார் அல்லது குறைட்டைவிட்டு தூங்குவார் என்றும் அமைச்சர் நிலோபர் கபில் விமர்சனம் செய்தார்.

click me!