முட்டாள்களே விளையாடாதீர்கள்... பாமக ராமதாஸ் வேண்டுகோள்..!

By Thiraviaraj RMFirst Published Apr 1, 2020, 3:53 PM IST
Highlights

உலகம் இன்றிருக்கும் சூழலில் எவரையும் முட்டாள்களாக்க முயல வேண்டாம் என பாமக நிறுவனர் ராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார்,

உலகம் இன்றிருக்கும் சூழலில் எவரையும் முட்டாள்களாக்க முயல வேண்டாம் என பாமக நிறுவனர் ராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார்,

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘’இராமநாதபுரம் மாவட்டத்தில் மக்களுக்கான நிவாரண உதவிகள் வீடுகளுக்கே சென்று வழங்கப்படும்  என்று அம்மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். அதேமுறையை பயன்படுத்தி தமிழ்நாடு முழுவதும் வீடுகளுக்கே சென்று உதவிகளை வழங்குவதற்கான வாய்ப்புகளை அரசு ஆராய வேண்டும்!

தமிழ்நாட்டில் வாழ்வாதாரம் இழந்த மக்களுக்கு நிவாரணம் வழங்கும் பணி நாளை தொடங்கும் நிலையில், நியாயவிலைக் கடைகளில் கூட்டம் சேருவது தவிர்க்கப் படுவதையும், சமூக இடைவெளி கடைபிடிக்கப்படுவதையும் உறுதி செய்ய வேண்டும். இதற்கு பொதுமக்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்! 

இன்று உலக முட்டாள்கள் தினம் தான். ஆனால், நாடு... ஏன் உலகம் இன்றிருக்கும் சூழலில் எவரையும் முட்டாள்களாக்க முயல வேண்டாம். கொரோனா அச்சமும், பதற்றமும் விலகும் வரை இத்தகைய அதிர்ச்சி விளையாட்டுகளை ஒதுக்கி வைப்போம். மக்களிடம் நம்பிக்கையை விதைப்போம்’’ எனத் தெரிவித்துள்ளார்.

click me!