மதுபானம் வேண்டுமா..? கவலையை விடுங்க... முதல்வர் போட்ட அதிரடி உத்தரவு..!

By Thiraviaraj RMFirst Published Mar 30, 2020, 10:47 AM IST
Highlights

ஊரடங்கு உத்தரவால் மதுக்குடிக்க முடியாமல் பரிதவிப்போருக்கு மருத்துவரின் பரிந்துரை சீட்டு கொண்டு வந்தால் மதுபானம் கொடுக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். 

ஊரடங்கு உத்தரவால் மதுக்குடிக்க முடியாமல் பரிதவிப்போருக்கு மருத்துவரின் பரிந்துரை சீட்டு கொண்டு வந்தால் மதுபானம் கொடுக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். 

கேரளாவில் ஊரடங்கு உத்தரவால் மதுக்குடிக்க முடியாமல் 7 பேர் தற்கொலை செய்து கொண்டனர். பலர் மன அழுத்ததில் தவிக்கின்றனர். சிலர் வீட்டை விட்டு வெளியேறி மன நோயாளிகளை போல புத்தி பிறழ்வுடன் நடந்துப் கொள்கின்றனர். தமிழகத்திலும் இதுபோன்ற நிலை உள்ளது. 

ஊரடங்கு உத்தரவிட்டு ஐந்து நாட்களிலேயே இப்படி சம்பவங்கள் நடைபெறும் நிலையில் இன்னும் 16 நாட்கள் ஊரடங்களை கடக்க வேண்டி இருக்கிறது. ஆகையால் மது கிடைக்காமல் போனால் இன்னும் பல அசம்பாவித சம்பவங்கள் நிகழும் என்பதை உணர்ந்த கேரள முதல்வர் பினராயி விஜயன் மருத்துவர்கள் பரிந்துரை சீட்டுடன் வருபவர்களுக்கு மதுபானம் வழங்க உத்தரவிட்டுள்ளார்.

click me!