தூத்துக்குடி கொலையை நியாயப்படுத்தாதீர்கள்... கனிமொழி கண்டனம்

Asianet News Tamil  
Published : May 25, 2018, 11:06 AM ISTUpdated : Sep 19, 2018, 02:25 AM IST
தூத்துக்குடி கொலையை நியாயப்படுத்தாதீர்கள்... கனிமொழி கண்டனம்

சுருக்கம்

dmk protest for thoothugudi death

 தூத்துக்குடியில் மக்கள் போராட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் 13 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் அரசு 144 தடை உத்தரவையும் அமலில் வைத்திருந்த்து. தூத்துக்குடியில் நடந்த படுகொலையை கண்டித்து பலரும் தமிழகம் முழுக்க போராட்டம் நடத்தி வருகின்றனர்.

திமுக தலைமையில் அனைத்துக்கட்சிகளும் இன்று கடையடைப்பு மற்றும் சாலைமறியலில் தற்போது ஈடுபட்டு வருகின்றனர். தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கி சூட்டில் 13 பேர் உயிரழந்துள்ளன்ர். இதனை கண்டித்து எதிர்கட்சிகள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பதவி விலக வலியுறுத்தியும் அங்கு பொறுப்பில் இருந்த காவல்துறை மற்றும் ஆட்சியர் பதவி விலக கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

சென்னை எக்மோர் ரயில் மறியல் போராட்டத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், மனித நேய மக்கள்கட்சி தலைவர் ஜவாஹீருல்லா திமுக எம்பி கனிமொழி ஆகியோர் தலைமையில் ரயில் மறியல்  செய்ய முற்பட்ட போது காவல்துறை அனுமதிக்கவில்லை. இதனால் எக்மோர் சாலையில் அமர்ந்து போராடி வந்தனர். தற்போது காவல்துறை அவர்களை கைது செய்து வருகிறது.

இந்நிலையில் தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கி சூட்டை எடப்பாடி அரசு எந்த வகையிலும் நியாப்படுத்த கூடாதென கனிமொழி தன் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

 

PREV
click me!

Recommended Stories

எடப்பாடியை கவிழ்க்க ஓபிஎஸ்... ஸ்டாலின் அதிரடி வியூகம்..! தென்மாவட்டங்களில் செக்..!
உன் அழகில் மயங்கியே உன் கணவருக்கு வேலை கொடுத்தேன்..! அதிகாரியின் மனைவி மீது ஆசைப்பட்ட டிரம்ப் வீடியோ.!