நாளை மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. எம்.பி.க்கள் கூட்டம்..!

By vinoth kumarFirst Published May 24, 2019, 5:03 PM IST
Highlights

மக்களவை தேர்தலில் வெற்றிபெற்ற தி.மு.க. எம்.பி.க்களின் ஆலோசனை கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் நாளை மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறுகிறது.

மக்களவை தேர்தலில் வெற்றிபெற்ற தி.மு.க. எம்.பி.க்களின் ஆலோசனை கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் நாளை மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறுகிறது.

 

தமிழ்நாட்டில் உள்ள 38 மக்களவை தொகுதிகளில் ஏப்ரல் 18-ம் தேதி நடைபெற்ற தேர்தலில் 37 இடங்களில் வெற்றிபெற்ற தி.மு.க. கூட்டணி மொத்தம் பதிவான வாக்குகளில் 2 கோடியே 15 லட்சத்து 96 ஆயிரத்து 481 (51.5 சதவீதம்) வாக்குகளை பெற்றது. வெற்றி பெற்றவர்களில் சில எம்.பி.க்கள் சென்னையில் இன்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர். 

இந்நிலையில், மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை மாலை 5 மணியளவில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.க்களின் ஆலோசனை கூட்டம் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் என அக்கட்சி தலைமை அறிவித்துள்ளது.

click me!