பரபரக்கும் தமிழக அரசியல் களம்... நாளை திமுக எம்எல்ஏக்கள் கூட்டம்... பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு..!

By vinoth kumarFirst Published May 3, 2021, 11:48 AM IST
Highlights

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டம் நடக்க உள்ளதாக பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டம் நடக்க உள்ளதாக பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே திமுக பல தொகுதிகளில் முன்னிலை பெற்றது. இறுதியில் திமுக கூட்டணி 159 தொகுதிகளில் மாபெரும் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க உள்ளது. இதனையடுத்து, இன்று காலை  செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மு.க.ஸ்டாலின்;- முதல்வராக பதவி ஏற்க உள்ள நிகழ்ச்சி எளிய முறையில் ஆளுநர் மாளிகையில் பதவி ஏற்பேன் எனத் தெரிவித்திருந்தார். இந்நிலையில், திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நாளை சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற உள்ளது. 

இதுகுறித்து திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன்  வெளியிட்டுள்ள அறிவிப்பில்;- தலைவர் ஸ்டாலின் தலைமையில் புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டம் 4.5.2021 செவ்வாய்க் கிழமை மாலை 6.00 மணியளவில், சென்னை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள “கலைஞர் அரங்கில்” நடைபெறும்.

அதுபோது புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்”.எனத் தெரிவித்துள்ளார். 

click me!