திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் மறைவு மிகுந்த வேதனையளிக்கிறது... முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இரங்கல்..!

Published : Jun 10, 2020, 10:21 AM IST
திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் மறைவு மிகுந்த வேதனையளிக்கிறது... முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இரங்கல்..!

சுருக்கம்

திமுக சட்டமன்ற உறுப்பினரும் அக்கட்சியின் முன்னோடி நிர்வாகிகளில் ஒருவருமான ஜெ.அன்பழகன் அவர்கள் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்ற செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது. 

திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் மறைவுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரங்கலை தெரிவித்துள்ளார்.

திமுக எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் மூச்சுத்திணறல் காரணமாக கடந்த 2-ம் தேதி குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதனையடுத்து, அவரை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து மருத்துவர்கள் கண்காணித்து வந்தனர். அவருக்கு மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதால் வென்டிலேட்டர் பொருத்தப்பட்டது.

இந்நிலையில் திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் இன்று காலை 8.05 மணியளவில் சிகிச்சை பலனின்றி காலமானார். கொரோனாவுக்கு தமிழகத்தில் எம்எல்ஏ ஒருவர் உயிரிழந்தது இதுவே முதல் முறையாகும். திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் மறைவுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி டுவிட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார்.

அதில், திமுக சட்டமன்ற உறுப்பினரும் அக்கட்சியின் முன்னோடி நிர்வாகிகளில் ஒருவருமான ஜெ.அன்பழகன் அவர்கள் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்ற செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது. அன்னாரது குடும்பத்தினருக்கும் அவர் சார்ந்த இயக்கத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார். முன்னதாக ஜெ.அன்பழகன் உடல்நிலை குறித்து ரேலா மருத்துவர்களிடம் கேட்டறிந்த முதல்வர் அரசு தரப்பில் எந்த உதவியையும் செய்ய தாயார் என கூறியிருந்தார் என்பது குறிப்பிபடத்தக்கது. 

PREV
click me!

Recommended Stories

தவெக அலுவலகம் பிரமாதம்..! அறிவாலயம் போனா சுடுகாடு மாதிரி இருக்கும்.. நாஞ்சில் சம்பத் அதிர்ச்சி பேச்சு
இப்படியொரு ப்ளானா..? விஜயின் டபுள் ஸ்டாண்ட் ..! என்.டி.ஏ கூட்டணிக்கு கேட் போடும் ராகுல்..! திமுகவுக்கு திருகுவலி..!