என் ஐ ஏ சட்டத்தில் கைது! பதறிப்போய் விளக்கம் அளித்த திமுக பிரமுகர்!

By Asianet TamilFirst Published Aug 17, 2019, 2:10 PM IST
Highlights

தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில்காஷ்மீர்  இந்தியாவிற்கு  சொந்தமான  பகுதி அல்ல என்றும் இந்திய ஒருமைப்பாட்டிற்கு எதிரான எந்த கருத்தையும் சொல்லவில்லை.என்றும் திமுக வழக்கறிஞர் அ.சரவணன் விளக்கமளித்துள்ளார்.
 

தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில்காஷ்மீர்  இந்தியாவிற்கு  சொந்தமான  பகுதி அல்ல என்றும் இந்திய ஒருமைப்பாட்டிற்கு எதிரான எந்த கருத்தையும் சொல்லவில்லை.என்றும் திமுக வழக்கறிஞர் அ.சரவணன் விளக்கமளித்துள்ளார்.

தேசத்திற்கு எதிராக பேசியதாக கூறப்பட்ட இந்த பேச்சு மிகப்பெரிய பின்விளைவுகளை ஏற்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக இந்த பிரிவினைவாத பேச்சுக்கு தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது கூட செய்யப்படலாம் என்ற பேச்சும் எழுந்தது. இந்த நிலையில் தான் திமுக வழக்கறிஞர் சரவணன் பதறிப்போய் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார்.


 
அறிக்கையின் விவரம் பின்வருமாறு:  

கடந்த 12.08.2019 ரிபப்ளிக் டீவியில் காஷ்மீர் விவகாரம் பற்றிய விவாதத்தில், திமுகவின் சார்பாக கலந்துக்கொண்டேன். அந்த விவாதத்தின் பொழுது, திமுகவின் நிலைப்பாடு பற்றி விளக்கிய பின், காஷ்மீர் பற்றிய வரலாற்றை பேச முற்படுகையில், “Kashmir was never an integral part of India” என்று சொன்னவுடன், நெறியாளர் அர்னாப் கோஸ்வாமி மேற்கொண்டு பேச விடாமல் கடுமையான வார்த்தைகளால் தாக்க ஆரம்பித்தார். மற்ற பங்கேற்பாளர்களும் அவருடன் சேர்ந்து கடும் சொற்களை பயன்படுத்த ஆரம்பித்தனர். 

அர்னாப் கோஸ்வாமி விளக்கம் சொல்ல வேண்டுமென்று சொல்லிவிட்டு, விளக்கம் கொடுக்க வாய்ப்பளிக்காமல், நான் பேசியதை திரித்து, “Saravanan How can you say Kashmir is not a part of India” நான் “I said Was” என்று மறுத்து பதிலளித்தேன். இந்தியா சுதந்திரம் அடையும்பொழுது காஷ்மீர் இந்தியாவுடன் இல்லை. அதன் பின்னரே ராஜா ஹரிசிங், இந்தியாவுடன் சில நிபந்தனைகளோடு இணைந்துக்கொள்ள ஒரு ஒப்பந்தம் போடுகிறார். அதனை காஷ்மீர அரசியல் நிர்ணய சபை ஒத்துக்கொண்ட பின்னர் 1956ஆம் ஆண்டு, காஷ்மீர அரசியல்  சட்டத்தின் 3ஆவது சரத்தின் படி “3. State of Jammu and Kashmir is and shall be an integral part of the Union of India.”.   காஷ்மீரத்து பிரச்சனையை வரலாறு அறியாமல் பேசமுடியாது. இந்த வரலாற்று நிகழ்வை குறிக்கும் விதமாகத்தான் “Kashmir was never an integral part of India” என்று சொன்னேன். அதன் பின்னர் அந்த விவாதத்தில் மேற்சொன்ன கருத்தை வெளிப்படுத்த வாய்ப்பளிக்காமல், தொடர்ந்து கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தியதால், அந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினேன். சுமார் 16 நிமிடங்கள் அந்த விவாதத்தில் பங்கு பெற்றேன். 

சமூக வலைதளங்களில் பாஜகவினர், பாதியில் வெளியேறிய திமுக வக்கீல் சரவணன் என போட்டோ ஷாப் செய்து பொய் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நான் ஏதோ காஷ்மீர் இந்தியாவிற்கு சொந்தமான பகுதி அல்ல என சொன்னது போல பொய்ப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது பாஜக. முழு வீடியோவையும் வெளியிடாமல், வெட்டியும், ஒட்டியும் வழக்கம்போல் இறங்கியுள்ளனர் பொய் புரட்டு பா.ஜ.க.வினர். அந்த விவாதத்தில் “Kashmir was never an integral part of India” என்று சொன்ன அடுத்த நொடி அர்னாப் கோஸ்வாமி, என்னை பேசவிடாமல்,

மற்றவர்களோடு சேர்ந்து கூச்சல் இடுகிறார். பேசியதை திரித்து “How can you say Kashmir is not an integral part of India” என்று “was” என்று சொன்னதை “is” என திரிக்கிறார். விளக்கம் சொல்ல விடாமல் மற்ற பாஜகவின் பங்கேற்பாளர்கள்,  கூச்சல் போட்டு பேச விடாமல், தொடர்ந்து கடும் வார்தைகளால் தாக்கினர்.

விளக்கம் சொன்ன பிறகும் மீண்டும் அதே கேள்வியை திரித்து கேட்டதால் “உங்களின் பலியாடு நான் அல்ல” என்று வெளியேறினேன். 

மு.க.ஸ்டாலின் அவர்கள், “தேசபக்தி பாடத்தை எங்களுக்கு யாரும் கற்றுக் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. இந்திய-சீனா போரின்போதும், இந்திய-பாகிஸ்தான் போரின்போதும், கார்க்கில் போரின் போதும் நாங்கள் தாய் நாட்டின் பக்கம் நின்று, இந்தியாவிலேயே முதன் மாநிலமாக நிதிஉதவி செய்திருக்கிறோம்” என்று உரையாற்றியிருக்கிறார்.

கழகத் தொண்டராகிய நானும், இந்திய ஒருமைப்பாட்டிற்கு எதிராக எந்தவொரு கருத்தையும் அந்நிகழ்ச்சியில் பதிவு செய்யவில்லை என்பதை மீண்டும் ஒருமுறை உறுதியாக தெரிவிக்க விரும்புகிறேன் என்று சரவணன் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். 

click me!