அதிமுகவுக்கு கைகொடுக்க களத்தில் குதித்த விஜயகாந்த்..!! விக்கிரவாண்டியில் சூராவளி சுற்றப் பயணம்..!!

By Ezhilarasan BabuFirst Published Oct 16, 2019, 4:46 PM IST
Highlights

திரையில் பேசும் வசனங்களில் பல்லாயிரக் கணக்கான ரசிகர்களை தன் காலடியில் கட்டிபோட்டு வைத்திருந்தவர் விஜயகாந்த். திரையில் அரசியல் பேசிப்பேசி ரசிகனை தொண்டனாக மாற்றியதும் அவரின் வசனங்கள்தான். இடையில் அவருக்கு திடீர் என்று ஏற்பட்ட உடல் நலக்குறைவால் அவரால் சரியாக பேசமுடியாத நிலை ஏற்பட்டு. அதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வருகிறார் விஜயகாந்த். 

வரும் 19ஆம் தேதி, தேமுதிக தலைவர் விஜயகாந்த் விக்ரவாண்டி தொகுதியில்  பிரச்சார சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ளார் என தேமுதிக தலைமை கழகம்  அறிவிப்பு வெளியிட்டுள்ளது.  இந்த அறிவிப்பு தேமுதிக தொண்டர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காரணம், அவரின் பேச்சை கேட்க மீண்டும் ஒரு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது என்பதே அகும். 

சினிமாவில் , எவ்வளவு நீளமான வசனமாக இருந்தாலும் சரி, ஒரே மூச்சில் தம்கட்டி அடித்து தூக்குவதில் விஜயகாந்திற்கு நிகர் விஜயகாந்த் மட்டும்தான்... அதேபோல்  முதன் முதலில் தமிழ் சினாமாவில் அடுக்கடுக்கான புள்ளிவிவரங்களுடன் வசனங்கள் பேசி கைத்தட்டல் அள்ளியவரும் அவர்தான். அந்தளவிற்கு கம்பீரக் குரலில் அவர் திரையில் பேசும் வசனங்களில் பல்லாயிரக் கணக்கான ரசிகர்களை தன் காலடியில் கட்டிபோட்டு வைத்திருந்தவர் விஜயகாந்த். திரையில் அரசியல் பேசிப்பேசி ரசிகனை தொண்டனாக மாற்றியதும் அவரின் வசனங்கள்தான். இடையில் அவருக்கு திடீர் என்று ஏற்பட்ட உடல் நலக்குறைவால் அவரால் சரியாக பேசமுடியாத நிலை ஏற்பட்டு. அதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வருகிறார் விஜயகாந்த். சமீபத்தில் நடந்து முடிந்த தேமுதிக முப்பெரும் விழாவில் அவர் பேசிய சில வார்த்தைகள் தேமுதிக தொண்டர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியது. இந் நிலையில் விஜயகாந்த் பேச்சைக் கேட்க தேமுதிக தொண்டர்கள் ஆவலுடன் காத்திருந்த நிலையில் அவர் சட்டமன்ற இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் கலந்து கொள்ள உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. தொண்டர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விக்கிரவாண்டி நாங்குநேரி சட்டமன்ற இடைத்தேர்தலில் வெற்றி  யாருக்க என்ற  போட்டியில் அதிமுக திமுக நேரடியாக களத்தில் இறங்கி பிரச்சாரத்தை தீவிரப் படுத்திவரும் நிலையில் தனது கூட்டணி கட்சியான அதிமுக வேட்பாளரை ஆதரித்து  விஜயகாந்த் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது. அது குறித்து  தேமுதிக தலைமை கழகம் வெளியிட்டுள்ளது செய்தி குறிப்பில்,  நடைபெறவிருக்கும் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் வேட்பாளரை ஆதரித்து கழக நிறுவனத் தலைவர் மற்றும் பொதுச்செயலாளர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் 19-10- 2019  தேதியில் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிகள் பிரச்சார சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விஜயகாந்த் பிரச்சாரக் களத்திற்கு வர உள்ளதை அடுத்து தேர்தல் களம் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது.

click me!