பழனிச்சாமியை சட்டையப் பிடித்து இழுத்து சென்று முதல்வராக்கிய தினகரன்..!

Asianet News Tamil  
Published : Sep 26, 2017, 10:24 AM ISTUpdated : Sep 19, 2018, 01:13 AM IST
பழனிச்சாமியை சட்டையப் பிடித்து இழுத்து சென்று முதல்வராக்கிய தினகரன்..!

சுருக்கம்

dinakaran pulled palanisami shirt and selected as cm

எடப்பாடி பழனிச்சாமியை தினகரன் தான் முதல்வராக்கினார் என ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் தெரிவித்துள்ளார்.

தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தீபக் இதனைத் தெரிவித்தார். கூவத்தூரில் சசிகலா தலைமையில் முதல்வரைத் தேர்ந்தெடுக்க நடந்த எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் செங்கோட்டையன் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 

ஆனால் செங்கோட்டையன் வேண்டாம்; எடப்பாடி பழனிச்சாமியை முதல்வராக்கலாம் என தினகரன் பரிந்துரைத்ததாகவும் அதன்படியே பழனிச்சாமி முதல்வராக்கப்பட்டதாகவும் தீபக் தெரிவித்தார். பழனிச்சாமியை பரிந்துரைக்க அவரது சட்டையைப் பிடித்து தினகரன் இழுத்து வந்ததாகவும் தீபக் தெரிவித்தார்.

தீபக் கூறிய இந்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

PREV
click me!

Recommended Stories

5.5 லட்சம் கோடி கடன்.. தமிழக மக்களை கடனாளியாக்கிய முதல்வர் ஸ்டாலின்.. இபிஎஸ் விமர்சனம்!
‘4-ல் 1கூட இல்லை.. ஸ்டாலின் சொல்லும் அத்தனையும் பச்சைப் பொய்..! எடப்பாடி பழனிசாமி சீற்றம்..!