டெல்லியின் விருப்பம் இதுதான்.. நானும் ஜெ., மாதிரிதான்.. சும்மா விடமாட்டேன்!! தினகரன் சூளுரை

 
Published : Feb 24, 2018, 12:47 PM ISTUpdated : Sep 19, 2018, 02:00 AM IST
டெல்லியின் விருப்பம் இதுதான்.. நானும் ஜெ., மாதிரிதான்.. சும்மா விடமாட்டேன்!! தினகரன் சூளுரை

சுருக்கம்

dinakaran pledge on jayalalitha birthday

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 70வது பிறந்தநாள் இன்று அதிமுகவினரால் வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது. 

இந்நிலையில், ஜெயலலிதாவின் பிறந்தநாளை ஒட்டி தினகரன் எம்.எல்.ஏ செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், அரசியலில் தன்னை வீழ்த்த நினைத்தவர்களுக்கு சிம்ம சொப்பனமாகவும் அஞ்சாத சிங்கமாகவும் திகழ்ந்தவர் ஜெயலலிதா என புகழாரம் சூட்டியுள்ளார். 

இதன்மூலம் தானும் ஜெயலலிதா மாதிரிதான் என தன்னை வீழ்த்த நினைக்கும் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ்க்கு தினகரன் விடுத்திருக்கும் தகவலாகவும் பார்க்கப்படுகிறது.

துரோகிகளிடம் அதிமுகவும் இரட்டை இலை சின்னமும் இருக்க வேண்டும் என்பதுதான் டெல்லியின் விருப்பம். தலைநிமிர்ந்த தமிழகம், வளமான தமிழர் வாழ்வு என்ற ஜெயலலிதாவின் கொள்கையை நிறைவேற்றுவோம் என தினகரன் சூளுரைத்துள்ளார்.
 

PREV
click me!

Recommended Stories

மதத்தின் பெயரால் உணர்வுகளை தூண்டினால் அவரிடம் கவனமாக இருக்க வேண்டும்... கிறிஸ்தவ விழாவில் ஸ்டாலின் பாவ எச்சரிக்கை..!
அனிதா தற்கொலையை திமுக தடுத்து இருக்கலாமே... பூர்ணசந்திரன் மரணத்தை திரித்துக் கூறுவதா..? டாக்டர் சரவணன் ஆவேசம்..!