குரங்கணி சென்றாரா? பாரதிராஜா... காட்டிக்கொடுத்த போட்டோ... விதியை மீறியதாக பாரதிராஜா மீது விசாரணை.!!

By T BalamurukanFirst Published May 15, 2020, 11:27 PM IST
Highlights

கொரோனா தடுப்பு பணியின் போது குரங்கணி சென்று திரும்பிய இயக்குனர் பாரதிராஜாவுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் என்று கருத்தையும் பதிவிட்டுள்ளார். தனிமைப்படுத்திக்கொண்டவர் சுகாதாரத்துறையின் கண்காணிப்பில் இருந்தவர் எப்படி குரங்கனி போனார்? என்கிற கேள்வி எழுந்துள்ளது.இதனால் சிக்கலில் பாரதிராஜா இருப்பதாக தெரிகிறது.

போடி அருகே முந்தல் சோதனை சாவடியில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்ட சுகாதாரத்துறை அலுவலர் ஒருவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் இயக்குனர் பாரதிராஜாவுடன் இருக்கும் ஒரு புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். மேலும் அந்த புகைப்படத்தில், கொரோனா தடுப்பு பணியின் போது குரங்கணி சென்று திரும்பிய இயக்குனர் பாரதிராஜாவுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் என்று கருத்தையும் பதிவிட்டுள்ளார். தனிமைப்படுத்திக்கொண்டவர் சுகாதாரத்துறையின் கண்காணிப்பில் இருந்தவர் எப்படி குரங்கனி போனார்? என்கிற கேள்வி எழுந்துள்ளது.இதனால் சிக்கலில் பாரதிராஜா இருப்பதாக தெரிகிறது.

 

திரைப்பட இயக்குனர் பாரதிராஜா சென்னையில் இருந்து கடந்த வாரம் சொந்த ஊரான தேனிக்கு வந்தார். சென்னை சிகப்பு மண்டலமாக உள்ளதால் அங்கிருந்து வந்த பாரதிராஜாவை பரிசோதனை செய்து 14நாட்கள் எங்கும் வெளியில் செல்லவேண்டாம் என சுகாதாரத்துறை கேட்டுக்கொண்டிருந்தது.அந்த வகையில் இயக்குனர் பாரதிராஜாவும் தன்னை கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்திக் கொண்டார். சுகாதாரத்துறையினர் வேண்டுகோளை ஏற்று அவரும் தன்னை தனது வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டார். 

இந்நிலையில், போடி அருகே முந்தல் சோதனை சாவடியில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்ட சுகாதாரத்துறை அலுவலர் ஒருவர் தனது முகநூல் பக்கத்தில் இயக்குனர் பாரதிராஜாவுடன் இருக்கும் ஒரு புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இந்த படம் தற்போது பாரதிராஜாவுக்கு வினையாக அமைந்துள்ளது.
 அந்த புகைப்படத்தில், கொரோனா தடுப்பு பணியின் போது குரங்கணி சென்று திரும்பிய இயக்குனர் பாரதிராஜாவுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் என்று தனது கருத்தையும் பதிவிட்டுள்ளார் அந்த அலுவலர். 


 தனிமைப்படுத்தும் விதிமுறையை இயக்குனர் பாரதிராஜா மீறினாரா? என்ற சர்ச்சையை அந்த புகைப்படம் உருவாக்கி உள்ளது.  தேனி அல்லிநகரம் நகராட்சி சுகாதார அலுவலர்... இயக்குனர் பாரதிராஜா தன்னைத்தானே வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்ட நேரத்தில் எங்களிடம் தகவல் தெரிவிக்காமல் குரங்கணிக்கு சென்றாரா? என்று விசாரித்து வருகிறோம் என்கிறார்கள் அதிகாரிகள்.

click me!