ஆ.ராசா, பொன்முடிக்கு திமுகவில் முக்கிய பதவி... பொதுக்குழுவில் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு..!

By vinoth kumarFirst Published Sep 9, 2020, 11:24 AM IST
Highlights

திமுக துணைப் பொதுச்செயலாளராக ஆ.ராசா, பொன்முடி ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக அக்கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். இதனையடுத்து, திமுகவில் துணைப் பொதுச்செயலாளர்களின் எண்ணிக்கையை 3-ல் இருந்து 5-ஆக உயர்ந்துள்ளது.

திமுக துணைப் பொதுச்செயலாளராக ஆ.ராசா, பொன்முடி ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக அக்கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். இதனையடுத்து, திமுகவில் துணைப் பொதுச்செயலாளர்களின் எண்ணிக்கையை 3-ல் இருந்து 5-ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா ஊரடங்கால் கடந்த மார்ச் 29-ம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு தள்ளிவைக்கப்பட்ட திமுக பொதுக்குழு கூட்டம் காணொலிக் காட்சி மூலம் இன்று காலை 10 மணிக்கு மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இதில், அண்ணா அறிவாலயத்தில் துரைமுருகன், டி.ஆர்.பாலு உள்பட 70க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். கூட்டத்தில் 67 இடங்களில் இருந்து திமுக பொதுக்குழு உறுப்பினர்கள் சுமார் 3,500 பேர் பங்கேற்றுள்ளனர்.

பொதுச் செயலாளா் பதவிக்கு துரைமுருகன், பொருளாளா் பதவிக்கு டி.ஆா்.பாலு ஆகியோா் மட்டுமே மனு தாக்கல் செய்திருந்தனர். ஆகையால், இருவரும் போட்டியின்றி ஒருமனதாகத் தோ்ந்தெடுக்கப்பட்டனர். பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட துரைமுருகனுக்கு திமுக தலைவர் மு.க ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார். மேலும், பொருளாளராக தேர்வான டி.ஆர்.பாலுவுக்கும் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார். 

அதேபோல், திமுக துணைப் பொதுச்செயலாளராக ஆ.ராசா, பொன்முடி ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதனையடுத்து, திமுகவில் துணைப் பொதுச்செயலாளர்களின் எண்ணிக்கையை 3-ல் இருந்து 5-ஆக உயர்ந்துள்ளது. துணைப் பொதுச்செயலராக ஐ.பெரியசாமி, அந்தியூர் செல்வராஜ், சுப்புலட்சுமி ஜெகதீசன் ஏற்கனவே உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

click me!