நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் தந்தை செந்தமிழன் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் தந்தை செந்தமிழன் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார்.
சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகில் உள்ள அரணையூரில் உள்ள அவரது வீட்டில் சீமானின் தந்தை செந்தமிழன் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார்.
இதுகுறித்து நாம்தமிழர் கட்சி ட்விட்டர் பக்கத்தில், ’நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் தந்தை செந்தமிழன் மறைவுற்றார் எனும் செய்தியை மிகுந்த வருத்தத்தோடு தெரிவிக்கின்றோம்! எனக் கூறப்பட்டுள்ளது. செந்தமிழன் விவசாய தொழில் செய்ந்து வந்தவர். சீமான் மறைந்த முன்னாள் சபாநாயகர் காளிமுத்துவின் மகள் கயல்விழியை காதலித்து திருமணம் செய்து கொண்டவர். செந்தமிழன் வயது மூப்பின் காரணமாக உயிழந்ததாகக் கூறப்படுகிறது.