
ஈரோடு கிழக்கு தொகுதி வாக்காளர் பட்டியலில் முறைகேடு உள்ளதாக தேர்தல் ஆணையத்தில் அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் சி.வி.சண்முகம் புகார் அளித்துள்ளார். இதுக்குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஈரோடு கிழக்கு தொகுதி வாக்காளர் பட்டியலில் பல்வேறு குளறுபடிகள் இருப்பதாக புகாரளித்தோம். ஈரோடு கிழக்கு தொகுதி முறைகேடுகள் குறித்து தேர்தல் ஆணையத்தில் விரிவாக தெரிவித்தோம். வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ள 30,056 பேர் அந்த முகவரியில் குடியிருக்கவில்லை.
இதையும் படிங்க: திமுக கூட்டணி கட்சிகள் விதிமீறல்களில் ஈடுபட்டுள்ளன.... செங்கோட்டையன் புகார்!!
வாக்காளர் பட்டியலில் உள்ள சுமார் 40 ஆயிரம் பேர் அந்த தொகுதியில் வசிக்கவில்லை. காலமாகிவிட்ட 7,947 பேரின் பெயர்களும் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளன. இறந்தவர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் 1,009 பேரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. சுமார் 8 ஆயிரம் பேரின் பெயர்கள் 2 முறை வாக்காளர் பட்டியலில் உள்ளது.
இதையும் படிங்க: பட்டினி சாவு ஒரு பக்கம்.. கோடிக்கணக்கில் புரளும் ஈரோடு தேர்தல் ஒரு பக்கம் - அரசியல் கட்சிகளின் சாதனை இதுவா.?
ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் ஒரே முகவரியில் இல்லாமல் வெவ்வேறு முகவரிகளில் உள்ளனர். ஈரோடு கிழக்கு தொகுதியில் உள்ள மொத்த வாக்காளர்களில் 20 சதவீதம் வாக்காளர்கள் விஷயத்தில் பிரச்சனை உள்ளது. வாக்காளர் பட்டியலை முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும். ஏற்கனவே புகார் அளித்தும் இதுவரை தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவில்லை. தேர்தல் நடத்தும் அலுவலர்கள் முறையாக செயல்படவில்லை என்று தெரிவித்துள்ளார்.