மகாராஷ்ட்ராவில் அடங்காமல் அத்துமீறும் கொரோனா வைரஸ்.!! கட்டுப்படுத்த முடியாமல் திணறும் அரசு.!!

By Thiraviaraj RMFirst Published May 7, 2020, 11:11 PM IST
Highlights

மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று புதிதாக 1,362 பேருக்கு கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதால் அங்கு மொத்த எண்ணிக்கை 18 ஆயிரத்தை தாண்டி இருக்கிறது. மராட்டியத்தில் ஒரே நாளில் 1,362 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதித்திருக்கிறது. இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கடந்த 1-ந்தேதியில் இருந்து ஜெட்வேகத்தில் அதிகரித்த வண்ணம் உள்ளது. 
 

T.Balamurukan

மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று புதிதாக 1,362 பேருக்கு கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதால் அங்கு மொத்த எண்ணிக்கை 18 ஆயிரத்தை தாண்டி இருக்கிறது. மராட்டியத்தில் ஒரே நாளில் 1,362 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதித்திருக்கிறது. இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கடந்த 1-ந்தேதியில் இருந்து ஜெட்வேகத்தில் அதிகரித்த வண்ணம் உள்ளது.

 

இந்நிலையில் இன்று ஒரே நாளில் 1,362 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மொத்த எண்ணிக்கை 18 ஆயிரத்து 120 ஆக அதிகரித்துள்ளது. இதற்கிடையில் வெளிமாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் மருத்துவர்களிடம் இருந்து சான்றிதழ் வாங்கி வந்தால்தான் சொந்த மாநிலங்கள் திரும்ப முடியும் என மகாராஷ்டிரா அரசு தெரிவித்திருந்தது. இதனால் மருத்துவமனைகளில் கூட்டம் அதிகரிக்க ஆரம்பித்தது. இதற்கிடையில் மெடிக்கல் சான்றிதழ் தேவையில்லை. தெர்மல் பரிசோதனை போதுமானது என்று அம்மாநில சுகாதாரத்துறை மந்திரி ராஜேஷ் டோபே தெரிவித்துள்ளார்.

click me!