தமிழகத்தை மிரட்டும் கொரோனா... இன்று மட்டும் 5,871 பேர் பாதிப்பு: 119 பேர் பலி

Published : Aug 12, 2020, 06:39 PM IST
தமிழகத்தை மிரட்டும் கொரோனா...  இன்று மட்டும் 5,871 பேர் பாதிப்பு: 119 பேர் பலி

சுருக்கம்

தமிழகத்தில் இன்று ஒரு நாள் மட்டும் புதிதாக 5 ஆயிரத்து 871 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தில் இன்று ஒரு நாள் மட்டும் புதிதாக 5 ஆயிரத்து 871 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இது தொடர்பாக மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலில், தமிழகத்தில் இன்று ஒரு நாள் மட்டும் 5 ஆயிரத்து 871 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், மாநிலத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 லட்சத்து 14 ஆயிரத்து 520 ஆக உயர்ந்துள்ளது. 
 
கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 52 ஆயிரத்து 929 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். வைரஸ் பரவியவர்களில் இன்று ஒரே நாளில் 5 ஆயிரத்து 633 பேர் சிகிச்சைக்கு பின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால், தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2 லட்சத்து 56 ஆயிரத்து 313 ஆக உயர்ந்துள்ளது. ஆனாலும் வைரஸ் தாக்குதலுக்கு இன்று ஒரே நாளில் 119 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 5 ஆயிரத்து 278 ஆக அதிகரித்துள்ளது.

PREV
click me!

Recommended Stories

ஐயா பாமகவுக்கு தலைவியாகும் ராமதாஸின் 2வது மனைவி..! சுசீலா எண்ட்ரியால் நோகும் வன்னியர் சமூகம்..!
வெறும் 44 கிமீ தூரம்தான்... ஈரானை நையப்புடைக்க கிடைத்த தளம்... மிக நெருக்கத்தில் அமெரிக்கா..!