காங்கிரஸ் கட்சி காணாமல் போகும்... மூத்த தலைவர்கள் எச்சரிக்கை..!

By Thiraviaraj RMFirst Published Sep 20, 2021, 1:51 PM IST
Highlights


ராகுல் காந்தி உடனடியாக தலைவர் பதவிக்கு வர வேண்டும். அதுவும் விரைவாக நடக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சியினர் வலியுறுத்தி உள்ளனர்.
 

ராகுல் காந்தி உடனடியாக தலைவர் பதவிக்கு வர வேண்டும். அதுவும் விரைவாக நடக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சியினர் வலியுறுத்தி உள்ளனர். காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து ராகுல்காந்தி விலகி 2 ஆண்டுகள் ஆகி விட்டது. ஆனாலும் இன்னும் காங்கிரஸ் கட்சிக்கு யாரும் தலைவராக நியமிக்கப்படவில்லை. ராகுல்காந்தியின் முடிவு என்ன என்பதை இதுவரை அறிவிக்கவில்லை.

 

இந்நிலையில், மூத்த தலைவர்கள் 23 பேர் சோனியா காந்திக்கு ஒரு கடிதம் எழுதினர். அதில் கட்சியை சீரமையுங்கள், நிரந்தர தலைவரை தேர்வு செய்யுங்கள் என்று கூறி இருந்தனர். ஆனால், இப்படி கடிதம் எழுதியவர்களை கட்சிக்கு எதிரான நபர்களாக கருதப்பட்டனர். இதனையடுத்து, கபில்சிபல் போன்ற தலைவர்கள் கட்சியின் செயல்பாடுகளை தொடர்ந்து விமர்சித்து வருகிறார்கள்.

பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருப்பதுடன் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் அளவுக்கு வலுவாகவும் இருந்து வந்தது. அம்மாநில முதல்வர் அம்ரீந்தர் சிங்குக்கு மக்கள் மத்தியில் நல்ல செல்வாக்கும் இருந்தது. ஆனால் திடீரென அவரை மாற்றி குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறார்கள். இதுவும் மூத்த காங்கிரஸ் தலைவர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது.

இதுகுறித்து கபில்சிபல் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘’உத்தரகாண்ட், குஜராத், பஞ்சாப் என நிர்வாகிகளை மாற்றி இருக்கிறார்கள். பழைய பழமொழி ஒன்று உண்டு. பிரச்சினைகளுக்கு சரியான நேரத்தில் உரிய தீர்வு காணாவிட்டால் நாளை அது மிகப்பெரிய பிரச்சினையாக மாறி விடும் என்று பழமொழி கூறுகிறது’’என குறிப்பிட்டு இருக்கிறார். அதாவது காங்கிரஸ் கட்சியில் ஏற்படும் பிரச்சினைகளுக்கு சரியான தீர்வு காணப்படுவது இல்லை என்பதை அவர் மறைமுகமாக சுட்டிக்காட்டி இருக்கிறார். சோனியாகாந்தி, ராகுல் காந்தி இருவருடைய செயல்பாடுகளையுமே விமர்சிக்கும் வகையில் அவருடைய கருத்துக்கள் வந்துள்ளன.

இதே போல மூத்த தலைவர் மணீஷ்திவாரியும் கட்சி முடிவை மறைமுகமாக விமர்சித்து இருக்கிறார். “இதுதான் காங்கிரஸ் கட்சி” என்று அவர் குறிப்பிட்டு இருக்கிறார். சசிதரூர் வெளியிட்டுள்ள செய்தியில், “காங்கிரஸ் கட்சிக்கு நிரந்தர தலைவர் வேண்டும். சோனியா காந்திக்கு எதிராக யாரும் பேசவில்லை. சோனியாவும் சிறப்பாக கட்சியை வழி நடத்தியவர். ஏற்கனவே சோனியாகாந்தி பதவி விலகியதும் ராகுல்காந்தி தலைவர் பதவிக்கு வந்து சிறப்பாகவே செயல்பட்டார். ராகுல் உடனடியாக தலைவர் பதவிக்கு வர வேண்டும். அதுவும் விரைவாக நடக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.

click me!