#BREAKING தேர்தல் களத்தில் பீதி கிளப்பும் கொரோனா... காங்கிரஸ் வேட்பாளருக்கு தொற்று உறுதி!

Published : Mar 23, 2021, 08:05 PM ISTUpdated : Mar 23, 2021, 08:06 PM IST
#BREAKING தேர்தல் களத்தில் பீதி கிளப்பும் கொரோனா... காங்கிரஸ் வேட்பாளருக்கு தொற்று உறுதி!

சுருக்கம்

பள்ளி, கல்லூரி மாணவர்களை கடந்து தற்போது கொரோனா அரசியல் களத்திற்குள் புகுந்தது கட்சி தலைவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

​தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ம் தேதி நடைபெற உள்ளதை முன்னிட்டு அரசியல் களம் திருவிழா கோலம் பூண்டுள்ளது. கட்சி கொடிகளுடன் வாக்கு கேட்கச் செல்லும் தொண்டர்கள், வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்கும் அரசியல் கட்சி தலைவர்கள் என தமிழகமே பரபரப்பாக காணப்படுகிறது. ஒருபக்கம் பரவி வரும் கொரோனா தொற்றிலிருந்து மக்களை பாதுகாப்பாக வழிநடத்தி, ஜனநாயக திருவிழாவை வெற்றிகரமாக நடத்தி முடிக்க தேர்தல் ஆணையம்  திட்டமிட்டு வருகிறது.

கடந்த 4 நாட்களாகவே ஆயிரத்தைக் கடந்து கொரோனா பாதிப்புகள் பதிவாகி வந்த நிலையில், பள்ளி, கல்லூரி மாணவர்களை கடந்து தற்போது கொரோனா அரசியல் களத்திற்குள் புகுந்தது கட்சி தலைவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சில தினங்களுக்கு முன்பு முதன் முறையாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேளச்சேரி தொகுதி வேட்பாளரான சந்தோஷ் பாபுவுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொண்ட அவர் ஆன்லைன் வழியாக பிரசாரம் செய்ய திட்டமிட்டு வருகிறார். 

அதேபோல் நேற்று காலை மக்கள் நீதி மய்யம் கட்சியின் அண்ணா நகர் தொகுதி வேட்பாளரும், மறைந்த குடியரசுத் தலைவர் அப்துல்கலாமின் உதவியாளருமான பொன்ராஜ்க்கு தொற்று உறுதிசெய்யப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். சேலம் மேற்கு தொகுதியில் தேமுதிக சார்பில் அழகாபுரம் மோகன் ராஜுக்கும் நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. கடந்த சில தினங்களுக்கு முன்பு தேமுதிக துணைச் செயலாளர் எல்.கே.சுதீஷூக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. 

தற்போது சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் 4வது வேட்பாளருக்கு  கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். 

PREV
click me!

Recommended Stories

திமுக-விடம் மன்னிப்பு கேட்ட விஜய்! தவெக அமைச்சர் செய்த தவறு! நடந்தது என்ன?
1947 Newspaper: ஆகஸ்ட் 15, 1947-ல என்ன நடந்தது? அந்த நியூஸ் பேப்பரை இப்ப படிக்கலாம்!