சபாநாயகர் தனபால் மீது திமுக கொண்டுவரும் நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு தமிழக சட்டமன்றத்தில் வரும் 23-ம் தேதி நடைபெற உள்ளது.
ஜெயலலிதா மறைவையடுத்து அதிமுகவின் பொதுச்செயலாளராக சசிகலாவும், முதலமைச்சராக பன்னீர்செல்வமும் பொறுப்பேற்றனர்.
பொதுச்செயலாளர் ஆன போதே சசிகலா ஜெயலலிதாவை போன்று உடை அணிவதும், போட்டு அணிவதும், மோதிரம் அணிவதும், செருப்பு அணிவதும், ஜெயலலிதா காரில் செல்வதும் என ஓவர் சல்லையை நிகழ்த்தினார்.
எனவே அதிமுக இரண்டாக உடைந்தது. இதையடுத்து அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா சொத்துகுவிப்பு வழக்கில் குற்றவாளி என்பது உறுதி செய்யப்பட்டதால் சிறைக்குச் சென்றார்.
இந்நிலையில், அக்கட்சியின் சட்டமன்ற குழு தலைவராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து ஆளுநரிடம் எம்.எல்.ஏக்களின் ஆதரவு பட்டியலை அளித்தமையால், எடப்பாடி முதலமைச்சராக பதவியேற்றார்.
ஆனால் சட்டமன்றத்தை கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் வித்யாசாகர் ராவ் உத்தரவிட்டார். அதன்படி பெரும்பான்மையை நிரூபிக்க சட்டமன்றத்தை கூட்டினார் எடப்பாடி பழனிச்சாமி.
அதில் பெரும்பான்மையை நிரூபிக்க ரகசிய வாக்கெடுப்பு நடத்தும்படி திமுக உறுப்பினர்கள் தெரிவித்தனர். அதற்கு சபாநாயகர் தனபால் மறுப்பு தெரிவித்துவிட்டார். இதனால் திமுகவினர் கடும் அமளியில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், சபாநாயகர் தனபால் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பாக தமிழக சட்டமன்றத்தில் மார்ச் 23-ம் தேதி வாக்கெடுப்பு நடைபெற உள்ளது.