பாஜக தொப்பி அணியாததால் கல்லூரியிலிருந்து முஸ்லீம் மாணவி சஸ்பெண்ட்..!

Published : Apr 10, 2019, 12:14 PM IST
பாஜக தொப்பி அணியாததால் கல்லூரியிலிருந்து முஸ்லீம் மாணவி சஸ்பெண்ட்..!

சுருக்கம்

பாஜக தொப்பியை அணிய மறுத்த முஸ்லிம் மாணவி கல்லூரியை விட்டு நீக்கம் செய்யப் பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.  

பாஜக தொப்பியை அணிய மறுத்த முஸ்லிம் மாணவி கல்லூரியை விட்டு நீக்கம் செய்யப் பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

உத்திர பிரதேசம் மாநிலம் மீரட்டில் உள்ள திவான் சட்டக் கல்லூரியில் சட்டப் படிப்பு பயிலும் 22 வயதான உம்மன் கனம் என்ற முஸ்லிம் மாணவி சக மாணவிகளுடன் ஆக்ரா சுற்றுலா சென்றுள்ளார். அங்கு சக கல்லூரி மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் உம்மன் கனம் தலையில் பாஜக தொப்பியை அணிய வலியுறுத்தியுள்ளனர். ஆனால் அவர் அதற்கு மறுத்துவிட்டார்.

இதற்கிடையே கல்லூரி நிர்வாகம் அவரை சஸ்பெண்ட் செய்துள்ளது. மேலும் அவர் மீது, சரியாக படிப்பதில்லை, சொல்லும் ப்ராஜக்ட்களை செய்வதில்லை என்ற போலியான குற்றச்சாட்டை வைத்து கல்லூரியை விட்டு சஸ்பெண்ட் செய்துள்ளது. இதனை அடுத்து உம்மன் கனம் கல்லுரிக்கு எதிராக போலீசில் புகார் அளித்துள்ளார். ஆனால் விஸ்வ இந்து பரிஷத் உள்ளிட்ட அமைப்புகள் மாணவி உம்மன் கனத்திற்கு மிரட்டல் விடுத்துள்ளதோடு, போலீசில் அளித்த புகாரை வாபஸ் பெற கட்டாயப் படுத்தியுள்ளது.

ஆனால் மாணவி அதற்கு மறுத்துவிட்டார். மேலும் கல்லூரி மொத்தமும் இந்துத்வாவின் கையில் உள்ளது. எனவே அங்கு செல்லவோ அங்கு பயிலவோ எனக்கு அச்சமாக உள்ளது. வீணாக நான் சரியாக படிப்பதில்லை என்று என் மீது பழி போடுகின்றனர். பாஜக தொப்பியை அணிய மறுத்ததால் என் மீது சஸ்பெண்ட் நடவடிக்கை எடுத்துள்ளனர்" என்று உம்மன் கனம் கல்லூரி மீது குற்றம் சாட்டியுள்ளார்.

இதுகுறித்து கல்லூரி இயக்குநர் எஸ்.எம். ஷர்மா கூறுகையில், ’’உம்மன் கனம் கல்லூரி ஒழுங்குகளை கடைப்டிப்பதில்லை. ஆகையால் அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இதை தவிர அவர் மீது நடவடிக்கை எடுக்க வேறு எந்தக் காரணமும் இல்லை’’ என அவர் தெரிவித்துள்ளார். 

PREV
click me!

Recommended Stories

GEN Z வாக்குகளுக்கு குறிவைத்த திமுக! மா.செ.களுக்கு ஸ்டாலின் முக்கிய உத்தரவு! விஜய் ஷாக்!
சட்டமானது 'வி.பி. ஜி ராம் ஜி' மசோதா! எதிர்ப்புகளை மீறி ஒப்புதல் அளித்த குடியரசுத் தலைவர்!