
தி.மு.க படு வீக்காக இருப்பதாக சொல்லப்படும் கொங்கு மண்டலத்திற்கு உட்பட்ட கோவையில் மாநாடு நடத்தி நாடாளுமன்ற தேர்தலுக்கான அரைகூவலை விடுக்க ஸ்டாலின் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2006-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் தொடங்கி, 2009ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல், 2011-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல், 2014ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் மற்றும் 2016-ம் நாடாளுமன்ற தேர்தல் என சுமார் 5 தேர்தல்களில் தி.மு.க.விற்கு கொங்குமண்டலத்தில் மிகப்பெரிய பின்னடைவு ஏற்பட்டது. நிர்வாகிகளை மாற்றிப் பார்த்தும் கொங்கு மண்டலத்தில் மட்டும் தி.மு.க.வால் பெரிய அளவில் வெற்றியை பெற முடியவில்லை.