பிரதமர், முதலமைச்சரை மிரட்டும் சித்த வைத்தியர்..! கதறி கூப்பாடு போடுவது சரியா..?

By Thiraviaraj RMFirst Published Mar 28, 2020, 6:57 PM IST
Highlights

கொரோனாவுக்கு மருந்து கண்டு பிடித்து வைத்திருப்பதாகவும், அதனை வேண்டுமென்றே இந்தியாவும், உலக நாடுகளும் தடுப்பதாகவும் மிரட்டல் விடுக்கும் வகையில் சித்தமருத்துவர் தணிகாசலம் பேசியுள்ளது அதிர்ச்சியை ஏற்பத்தி உள்ளது. 

கொரோனாவுக்கு மருந்து கண்டு பிடித்து வைத்திருப்பதாகவும், அதனை வேண்டுமென்றே இந்தியாவும், உலக நாடுகளும் தடுப்பதாகவும் மிரட்டல் விடுக்கும் வகையில் சித்தமருத்துவர் தணிகாசலம் பேசியுள்ளது அதிர்ச்சியை ஏற்பத்தி உள்ளது. 

’’ஒரு நோய் வந்தால் தற்காத்துக் கொள்வது மட்டுமல்ல. அதை குணப்படுத்துவதுதான் என் நோக்கம். கொரோனாவை வைத்து உலகம் முழுவதும் ஒரு காமெடி நடக்கிறது. நாங்கள் கொரோனாவை தடுக்கிறோம். அதற்காக செலவழிக்கிறோம். உலக வங்கி இவ்வளவு கொடுத்திருக்கிறது. அமெரிக்கா இவ்வளவு ஒதுக்கி இருக்கிறது எனச் ஒரு கோமாளி கூத்து நடந்து கொண்டிருக்கிறது.

இப்படி அவர்கள் தடுத்து வைத்துள்ளதால் அந்த நோயை ஒன்றும் செய்ய முடியாது. நோய் வந்தால் மருந்து சாப்பிட வேண்டும். அதை விடுத்து விட்டு மருந்தே இல்லை என்று இந்த மக்களை ஒரு கூட்டத்தில் அடைத்து வைக்கக்கூடாது. அடைத்து செத்துப் போனார்கள் என்று அறிவித்துவிட்டு...  உயிர் பிழைத்து ஓடிவிட்டான் என்று போக்கை கைவிட வேண்டும். உலகம் முழுவதும் இது ஒரு சடங்கு போல் ஆகிவிட்டது.

மெடிக்கல் மாபியாக்கள் மக்களை திசைதிருப்பி பயமுறுத்தி எப்போதும் அவர்கள் பயத்திலேயே இருக்க வேண்டும் என முடிவெடுத்து செய்வதைப் போல் உள்ளது. நான் இந்த நோயை குணப்படுத்தி விடலாம் என்று சொல்கிறேன். நாம் கொடுக்கும் மருந்தை சாப்பிட்டால் சில மணி நேரங்களிலேயே தொற்றும் நிலையிலிருந்து அந்த நோய் தொற்றா நிலைக்கு கொண்டு சென்று விடலாம். இந்த விஷயத்தை நான் கத்தி கத்தி சொல்லி தலைவலிதான் வந்தது. உலகம் முழுவதும் இந்த செய்தி போய் சேர்ந்துவிட்டது. இந்த நோய்க்காக இத்தனை கோடிகளை திரட்டி இருக்கிறோம்என்று சொல்கிறார்களே தவிர, இந்த நோயை குணமாக்க இத்தனை கோடி செலவிட்டு உள்ளோம் என்று அவர்கள் சொல்ல முடியவில்லை.

இப்போது மூன்று மாதம் ஆகிவிட்டது. என்னை கூட்டிச் செல்லுங்கள். அருகில் இருக்கும் தனியறையில் என்னை அடைத்து விடுங்கள். அந்த நோயளியுடன் கூடி இரு என்று என்னை சொல்லுங்கள். நானும் மருந்து கொடுக்கிறேன். கொடுக்கவில்லை என்றால் என்னை அந்த நோயாளி உடனே இருக்க வையுங்கள். வேண்டாம் என்று சொல்லவில்லை. சீனா கூப்பிட்டால் அங்கும் வருகிறேன். இந்தியா கூப்பிட்டால் இந்தியா வருகிறேன். டெல்லி கூப்பிட்டால் டெல்லி வருகிறேன். நோயாளியை என்னிடம் ஒப்படையுங்கள். குணமாகி விட்டால் ஏற்றுக் கொண்டு செல்லுங்கள். இல்லாவிட்டால் என்னையும் தூக்கி உள்ளே போடுங்கள்.

இவ்வளவு கொடூரமாக இந்த மக்களை பயன்படுத்துவதில் உங்களுக்கு என்ன லாபம் இருக்கிறது? உலகம் முழுவதும் பயப்படுகிறார்கள். 600 கோடி பேரை பயன்படுத்தி, பயமுறுத்தி என்ன செய்யப் போகிறீர்கள்? இப்படி பயன்படுத்தி பயமுறுத்தி வேறு வழி இல்லாமல் இந்த தடுப்பூசியை நீங்கள் போட்டாக வேண்டும் என்ற கட்டாயப்படுத்தி உலக மக்களை தள்ள பார்க்கிறீர்கள். இதுதான் உங்கள் திட்டமா? எவ்வளவு பொறுத்துக்கொள்ள முடியும்? மக்கள் பயப்படுகிறார்கள். குழந்தைகள் பயப்படுகிறார்கள்.

 காரில் செல்ல முடியவில்லை. பஸ்ஸில் செல்ல முடியவில்லை. விமானத்தில் செல்ல முடியவில்லை. மக்கள் ஆங்காங்கே முடங்கிக் கிடக்கிறார்கள். எதிரில் இருப்பவர் இருமினால் கூட இவர் கொரோனா நோயாளி என மக்கள் அஞ்சி ஓடுகிறார்கள். நாயைப் பார்த்து பயப்படலாம். பாம்பை பார்த்து பயப்படலாம். பக்கத்தில் இருக்கிற மனிதர்களைப் பார்த்து பயப்படலாமா? அந்த நிலைமையை உருவாக்கி விட்டீர்கள். நான் தயாரித்த மருந்தை கடை விரித்து வைத்திருக்கிறேன் எடுத்துக் கொள்ளுங்கள்.

கொள்ளாவிட்டால் நான் என்ன செய்யமுடியும்? சீனாவிலும் எனது அலுவலகத்தை வந்து பார்த்துவிட்டு அங்கு அழைப்பது சொல்லி இருக்கிறார்கள். ஏதோ கல்யாணத்திற்கு மாப்பிள்ளை பொண்ணு வீடு பார்ப்பதைப் போல இருக்கிறது. நான் இந்தியாவின் ஆயுஸ் அமைச்சரையும் சந்தித்து விட்டேன். அவர் வாங்க நம் பேசலாம் என்று அழைத்தார். நானும் பேசி இருக்கிறேன். மக்கள் சாவது கூட பரவாயில்லை. நமக்கும் நோய் வந்துவிடுமோ என்ற பயத்தில் வாழ்வதுதான் கொடுமையானது’’ என பேசியுள்ள திருத்தணிகாசலம் ஒரு முழுமையான வைத்தியர் என்றால் அவரது பேச்சை நாம் கேட்கலாம். 

கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்திருப்பதாக இப்படித் தம்பட்டம் அடித்துக் கொள்ளும் சித்த மருத்துவர் திருத்தணிகாசலம் கடலூர் மாவட்ட குள்ளஞ்சாவடி வருவாய் ஆய்வாளர் விசாரணை அறிக்கை அடிப்படையில் குறிஞ்சிப்பாடி வட்டாட்சியர் அளித்த 'MBBS MD' சான்றிதழின் கீழே, ‘’ பச்சிலை வைத்தியம் செய்து வருகிறார் என இதன் மூலம்  சான்றழிக்கப்படுகிறது. மேற்படி சான்று குள்ளஞ்சாவடி வருவாய் ஆய்வாளரது விசாரணையின் கிஅடிப்படையில் வழங்கப்படுகிறது என சான்றழித்துள்ளனர்.

 ’இந்த ஒரு சான்றிதழை வைத்து 15 ஆண்டுகளாக தொலைக்காட்சிகளில் மருத்துவ அறிவுரை வழங்கி கோடிக்கணக்கில் மோசடி செய்து வருவதாகக் கூறப்படுகிறது. என்னிடம் கரோனாவுக்கு மருந்து இருக்கிறது , அரசு என்னை அழைப்பதில்லை என்று கதறும் இவருக்கு தேவையில்லாமல் விளம்பரம் செய்வதுதான் கொடுமை.  இவர் மருந்து வைத்திருப்பதாகவும் ஆனால் வேண்டும் என்றே மக்களை அலட்சியப்படுத்தி கொடுமைப்படுத்தும் வகையில் இந்திய அரசாங்கமும், பிரதமர் மோடியும் தடுப்பதாக மக்கள் மனதில் எதிர்மறை எண்ணத்தை தோற்றுவித்து இந்த தணிகாசலம் மிரட்டுகிறார். 

பொதுவாக கொரோனா வைரஸ் தொற்று இருப்பது பலருக்கும் தெரியாது. அவர்கள் உணர்ந்து கொள்ளும் முன்பே அந்தத் தொற்று அவர்களை விட்டு சென்று விடும். அப்படியே அவர்கள் நோய்த் தொற்றை உணர்ந்தால் சில நாட்களில் அவர்களை விட்டு சென்று விடும். 80 சதவிகிதம் தனியாக இருந்தாலே போதும். கொரோனா சரியாகி விடும். 14 சதவிகிதம் நிமோனியா காய்ச்சல் வரும். மூன்றாம்படியாக தொண்டையில் எக்மோ செய்து  சளியை வெளியேற்றி சரி செய்வார்கள். அதற்கு மேல் சென்றால்தான் ஆபத்து. இதனை உணராமல் தன்னிடம் மருந்து இருப்பதாகவும் அதனை பயன்படுத்தாமல் உதாசீனப்படுத்துவதாகவும் பிதற்றும்  தனிகாசலம் போன்றவர்கள்  மக்கள் உயிரோடு விளையாடக்கூடாது. 

click me!