பாகிஸ்தானைவிட சீனாதான் இந்தியாவுக்கு டேஞ்சர்... சரத்பவார் எச்சரிக்கை..!

Published : Jul 12, 2020, 02:11 PM IST
பாகிஸ்தானைவிட சீனாதான் இந்தியாவுக்கு டேஞ்சர்... சரத்பவார் எச்சரிக்கை..!

சுருக்கம்

நாம் அனைவரும் பாகிஸ்தான்தான் மிகப்பெரிய எதிரி என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம், ஆனால் சீனாதான் மிகப்பெரிய அச்சுறுத்தல் என சரத் பவார் தெரிவித்துள்ளார்.

நாம் அனைவரும் பாகிஸ்தான்தான் மிகப்பெரிய எதிரி என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம், ஆனால் சீனாதான் மிகப்பெரிய அச்சுறுத்தல் என சரத் பவார் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தேசியவாத காங்கிரஸ் தலைவரும், முன்னாள் பாதுகாப்புத்துறை அமைச்சருமான சரத் பவார் கூறுகையில், ‘’நாம் எதிரியை பற்றி சிந்திக்கும்போது, முதல் பெயராக நமது மனதில் தோன்றுவது பாகிஸ்தான்தான். ஆனால் பாகிஸ்தானை பற்றி மிகப்பெரிய அளவில் கவலைப்பட வேண்டியதில்லை. நீண்டகாலமாக சீனாவின்  பலம், திட்டம், செயல் ஆகியவை இந்தியாவின் நலத்திற்கு எதிராகவே இருந்துள்ளது. இந்தியாவுக்கு சீனா மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்கிறது.

நட்புணர்வு என்ற பிம்பத்தை உருவாக்குவதன் மூலம் இரு நாட்டு பிரச்சினைகளை தீர்க்க முடியாது. பொருளாதாரத்தில் வலிமையாகுவதில் சீனா இந்தியாவுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்கும்’’ எனத் தெரிவித்தார்.

PREV
click me!

Recommended Stories

ஜனநாயகன் தயாரிப்பாளருக்கு முக்கிய அரசு பதவி! விஜய் முடிவின் பின்னணி இதுதான்! பரபரப்பு தகவல்!
Government scheme: பெண் குழந்தைகளுக்கு அரசு தரும் ரூ.50,000.! யாருக்கெல்லாம் கிடைக்கும் தெரியுமா?