முதல்வர் மு.க. ஸ்டாலின் காட்டியது பெருந்தன்மை.. கருணாநிதி படத் திறப்பு விழாவுக்கு அதிமுக வராதது பற்றி அப்பாவு!

By Asianet TamilFirst Published Aug 3, 2021, 10:11 PM IST
Highlights

முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருந்தன்மையோடு அனைத்து கட்சிகளையும்  விழாவில் பங்கேற்க அழைப்பு விடுத்தார் என்று தமிழக சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.
 

தமிழக சட்டப்பேரவையின் நூற்றாண்டு விழாவும் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உருவப்படம் திறப்பு விழாவும் நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் குடியரசுத் தலைவர் ராம்நாத் பங்கேறு சட்டப்பேரவையில் கருணாநிதியின் உருவப் படத்தைத் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சிகள் சிறப்பாக நடந்து முடிந்ததையடுத்து சபாநாயகர் அப்பாவு, துணை சபாநாயகர் பிச்சாண்டி, திமுக கொறடா கோவை செழியன் ஆகியோர் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள கருணாநிதி நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
 அப்போது அப்பாவு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “தமிழக வரலாற்றில் இது பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய நாள். முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உருவப்படத் திறப்பு விழா சீறும் சிறப்புமாக நடைபெற்றுள்ளது. முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருந்தன்மையோடு அனைத்து கட்சிகளையும்  விழாவில் பங்கேற்க அழைப்பு விடுத்தார். ஆனால், அதிமுக அதில் பங்கேற்காதது அவர்களுடைய நிலைப்பாடு” என்று அப்பாவு தெரிவித்தார். 

click me!