உண்மையான தீபாவளி என்னைக்கு தெரியுமா ? சந்திரபாபு நாயுடு என்ன சொல்கிறார் பாருங்கள் !!

By Selvanayagam PFirst Published Nov 7, 2018, 4:35 PM IST
Highlights

பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்டணி அரசு முடிவுக்கு வரும் நாள்தாள் இந்தியாவுக்கு உண்மையான தீபாவளி என்று ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கடுமையாக தாக்கிப் பேசியுள்ளார்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது பாஜகவுடன் முதன்முதலில் கூட்டணிவைத்து கொண்ட கட்சி சந்திர பாபு நாயுடுவின் தெலுங்கு தேசம்தான். அந்த அளவுக்கு மோடியும் பாபுவும் அதிக நெருக்கம் காட்டினார்கள். தேர்தல் வாக்குறுதியாக தெலுங்கு தேசமும்,பாஜகவும் ஆந்தி மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவதாக தெரிவிக்கப்பட்டது.

ஆனால் மோடி மத்தியில் ஆட்சி அமைத்து நான்கு ஆண்டுகளாகியும் ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படாததால், கடுப்பான சந்திரபாபு நாயுடு பாஜகவுடனான கூட்டணியை முறித்துக் கொண்டார். இதையடுத்து சந்திரபாபு நாயுடு பாஜக அரசையும், பிரதமர் நரேந்திர மோடியையும் கடுமையாக விமர்சித்து வருகிறார்.

பாஜகவுக்கு  எதிராக வலுவான கூட்டணியை அமைக்க சந்திரபாபு நாயுடு எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைத்து வருகிறார். இதற்காக அவர் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மாயாவதி, கெஜ்ரிவால், சரத்யாதவ் உள்ளிட்ட முக்கிய தலைவர்களை சந்தித்து பேசி உள்ளார்.

இந்த நிலையில் மோடி தலைமையிலான பாஜக கூட்டணி அரசு முடிவுக்கு வரும் நாளே உண்மையான தீபாவளி என்று சந்திர பாபுநாயுடு தெரிவித்துள்ளார்.

தீபாவளி பண்டிகையையொட்டி அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு மிக மோசமாக செயல்படுகிறது. ஆந்திராவில் சமீபத்தில் ஏற்பட்ட புயல் பாதிப்புக்கு ஒரு பைசா கூட நிதி உதவி செய்யாமல் மனித நேயமற்ற தன்மையுடன் இருக்கிறது. மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் செயல்படுகிறது. புயலால் பாதித்த மக்களுக்கு நாங்கள உதவி செய்தோம்.



தற்போது கொண்டாடப்படுவது தீபாவளி அல்ல. மோசமாக ஆட்சியை நடத்தும் மோடி தலைமையிலான பாஜக  கூட்டணி அரசு முடிவுக்கு வரும் நாளே உண்மையான தீபாவளி. அந்த தினத்தை மக்கள் ஆவலுடன்திர்நோக்குகின்றனர் என சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்..

click me!