
சட்டசபை அமளி சம்பந்தமாக 7 எம்எல்ஏக்கள் மீது கொடுக்கப்ட்ட புகாரின் பேரில் விசாரணை முடிந்து இன்று அறிக்கை தாக்கல் செய்யபடுவதால் சட்டசபையில் ரகளை நடக்கலாம் என எதிர்பார்க்கபடுகிறது.
ஜெ. மறைவுக்கு பிறகு ஓபிஎஸ் முதல்வராக தேர்வு செய்யபட்டார்.சசிகலா அதிமுக பொது செயலாளர் ஆனார். முதல்வர் ஓபிஎஸ்க்கு எதிராக அமைச்சர்களே பேட்டி அளித்ததும் முதல்வராக சசிகலாவே கூறியதும் பிரச்சனையை ஏற்படுத்தியது.
திடீரென எம்எல்ஏக்கள் கூட்டத்தை கூட்டி முதல்வராக சசிகலாவை அறிவித்தனர். இதை அடுத்து ஏற்பட்ட பிரச்னையில் ஓபிஎஸ் வெளியேறினார்.
சசிகலா முதல்வராவதில் சொத்து குவிப்பு வழக்கு குறுக்கிட 4 ஆண்டு சிறை தண்டனை கிடைத்தது.கூவத்தூரில் அதிமுக ஆதரவு எம்எல்ஏக்களை தானாக வைத்து எடப்பாடியை முதல்வராக தேர்வு செய்தனர்.
பல்வேறு பிரச்சனைகளுக்கு நடுவே எடப்பாடியை பெரும்பான்மையை நிரூபிக்க கவர்னர் அழைத்தார்.இதையடுத்து பிப் 18 அன்று சட்டசபையில் தனது பெரும்பான்மையை எடப்பாடி நிருபித்தார்.
இதில் ஏற்பட்ட அமளியில் சட்டசபை போர்க்களமானது. திமுக எம்எல்ஏக்கள் சபாநாயகரை கேரோ செய்து அவரது இருக்கையில் அமர்ந்து அமளியை ஏற்படுத்தினர்.போலீசார் சட்டசபைக்குள் வரவழைக்கப்பட்டு எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் உள்ளிட்டோர் வெளியேற்றபட்டனர்.
இந்த விவகாரம் குறித்து அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.அம்பேத்குமார்,கே.எஸ்.மஸ்தான்,முருகன்,கு.க.செல்வம், என்.சுரேஷ்ராஜன், க.கார்த்திகேயன்,கே.எஸ்.ரவிச்சந்திரன் ஆகிய 7 திமுக எம்எல்ஏக்கள் மீது புகார் அளித்தார்.இந்த புகார் உரிமை குழுவுக்கு அனுப்பப்பட்டது.
இந்த புகாரின் மீது 7 திமுக எம்எல்ஏக்கள் விளக்கம் அளித்தனர்.இந்நிலையில் விசாரணைக்கு பின் உரிமை குழு அறிக்கையை பொள்ளாச்சி ஜெயராமன் இன்று சட்டமன்றத்தில் தாக்கல் செய்கிறார்.
அறிக்கையின் படி திமுக உறுப்பினர்கள் மேல் நடவடிக்கை எடுக்கும்படி ஒருவேளை சபாநாயகர் உத்தரவிட்டால் சட்டசபையில் இன்று மீண்டும் அமளிக்காடாகும் என்று எதிர்பார்க்கபடுகிறது.