குங்குமம் வைத்தவகள் விபச்சாரியின் பிள்ளைகள் என கூறிய ஆ.ராசாவை மதிக்கலாமா? செல்லூர் ராஜூ ஆவேசம்..!

By vinoth kumarFirst Published Sep 24, 2022, 8:07 AM IST
Highlights

திமுக திராவிட மாடல் ஆட்சி என்கிறார்கள், கரண்ட் கொடுக்கவும் வக்கில்லை, மின்சார கட்டணம் உயர்த்த வெக்கமில்லை. அதிமுக  ஆட்சியில் ஆவின் பாலில் ஈ கிட்டந்திருந்தால் வானத்திற்கும், பூமிக்கும் திமுகவினர் குதித்திருப்பார்கள்.

ஏழைகளின் வரிப்பணத்தை பெற்றுக்கொண்டு ஆண்டிமுத்து ராசா இன்று ஆ.ராசாவாக மாறிவிட்டார் என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ ஆவேசமாக பேசியுள்ளார். 

பேரறிஞர் அண்ணாவின் 114 வது பிறந்த நாளை முன்னிட்டு அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமையில் மதுரை தெற்கு மாசி வீதி T.M. கோர்ட் அருகே பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ;- ஆட்சிக்கு வந்தவுடன் ஒரு சொட்டு மது கூட இருக்காது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சொன்னார். ஆனால் தற்போது தமிழகம் போதை மாநிலமாக மாறிவிட்டது.

இதையும் படிங்க;- ஆ. ராசா போன்ற பிள்ளையை பெற்றதற்கு அவர் தாய் தான் வருத்தப்பட வேண்டும்.. செல்லூர் ராஜூ ஆவேசம்

அன்றைக்கு எதிர்கட்சியாக இருந்த மு.க. ஸ்டாலின் ஜோசியத்தை பார்த்து அதிமுக ஆட்சி 3 மாத காலங்களில் கவிழ்ந்து விடும் என்று கூறினார். திமுக ஆட்சியில் விடியல் தருகிறேன் என்று கூறி இருட்டை கொடுத்துவிட்டார். நமக்கு விடியவே இல்லை. சட்டை கிழிந்து போனால் ஒட்டு போட்டு தைப்பார்கள் அது போல தான் மதுரைக்கு  முதலமைச்சர் ஸ்டாலின் வரும் போது சாலை அமைக்காமல் சாலையின் மேல் Batch Road போட்டார்கள், தமிழகத்திற்கே நிதி கொடுக்கும் நிதிமையமைசர் மதுரைக்கு மட்டும் நிதி கொடுப்பதில்லை.

திமுக திராவிட மாடல் ஆட்சி என்கிறார்கள், கரண்ட் கொடுக்கவும் வக்கில்லை, மின்சார கட்டணம் உயர்த்த வெக்கமில்லை. அதிமுக  ஆட்சியில் ஆவின் பாலில் ஈ கிட்டந்திருந்தால் வானத்திற்கும், பூமிக்கும் திமுகவினர் குதித்திருப்பார்கள். பெற்றை தாயை இழிவாக பேசிய ஆ.ராசாவை மதிக்கலாமா? குங்குமம் வைத்தவகள்  விபச்சாரியின் பிள்ளைகள் என ஆ.ராசா கூறினார். ஏழைகளின் வரிப்பணத்தை பெற்றுக்கொண்டு இன்று  ஆண்டிமுத்து ராசா இன்று ஆ. ராசாவாக மாறிவிட்டார். இந்துக்கின் வாக்குகளை பெற்றுக்கொண்டு இந்துக்களை இழிவாக பேசுவது எந்த விதத்தில் நியாயம்.

ஜெயலலிதா மாதிரி ஆட்சி செய்வதாக சொன்னால் மட்டும் போதாது. திமுக கட்சியில் நடைபெறும் அட்டூழியத்தை கண்டிக்க வேண்டும். வருகிற 29 ஆம் தேதி முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மதுரையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க இருப்பதாக செல்லூர் ராஜூ தகவல் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க;-  பாஜக, அதிமுக போட்ட சீக்ரெட் பிளான்.. தமிழகம் என்ன கலவர பூமியா? ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கு கி.வீரமணி சவால்

click me!