
மக்கள் குறை கேட்கவும், திட்டப்பணிகள் குறித்து ஆய்வு செய்யவும் விழுப்புரம் மாவட்டத்துக்கு சென்ற ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கு, திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் கருப்புகொடி காட்டி எதிர்ப்பு தெரிவித்தனர். ஆர்ப்பாட்டம் நடத்திய ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்துள்ளனர்.
ஆளுநர் பன்வாரிலால் புரோகித் விழுப்புரம் மாவட்டத்துக்கு இன்று காலை சென்றார். அங்கு மக்கள் குறை கேட்கவும், திட்டப்பணிகள் குறித்து ஆய்வு செய்வதற்காகவும் ஆளுநர் விழுப்புரம் சென்றார்.
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்த அவர், அங்கு அரசு விருந்தினர் இல்லத்தல் மக்கள் குறைகளைக் கேட்க வந்தார். ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து எம்.எல்.ஏ. பொன்முடி தலைமையில் ஏராளமான திமுகவினர் கருப்புக்கொடி காட்டி எதிர்ப்பு தெரிவித்தனர்.