போகும் இடம் எல்லாம் சமூக நீதி, சமத்துவம்.. திமுகவின் முகத்திரையை கிழித்த அண்ணாமலை !

By Raghupati RFirst Published Aug 19, 2022, 11:36 PM IST
Highlights

நாடு முழுவதும் 75வது சுதந்திர தின அமுதப் பெருவிழா உற்சாகமாக கடந்த 15 ஆம் தேதி கொண்டாடப்பட்டது. 

திருவள்ளூர் மாவட்டம் ஈகுவார்பாளையத்தில் நடந்த அரசு விழாவில் வட்டாட்சியர் கண்ணன் அவர்களுக்கு  இருக்கை வழங்காதது இந்த திமுக அரசின் சாதிய வன்மத்தின் உச்சம் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றஞ்சாட்டியுள்ளார்.   நாடு முழுவதும் 75வது சுதந்திர தின அமுதப் பெருவிழா உற்சாகமாக கடந்த 15 ஆம் தேதி கொண்டாடப்பட்டது. 

திருவள்ளூரில் நடந்த சுதந்திர தின விழா நிகழ்ச்சியில், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் அல்பி ஜான் வர்கீஸ் வழங்கினார்.  காவல் மற்றும் வருவாய் உள்ளிட்ட அரசு துறையைச் சேர்ந்த 233 பேர் பதக்கம், விருது வழங்கி கவுரவிக்கப்பட்டனர். இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டம் ஈகுவார்பாளையத்தில் நடந்த அரசு விழாவில் வட்டாட்சியர் கண்ணன் அவர்களுக்கு  இருக்கை வழங்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மேலும் செய்திகளுக்கு..“அரசு டெண்டரில் முறைகேடு.. எடப்பாடிக்கு எதிரான ஆதாரங்கள் இருக்கு !” அறப்போர் இயக்கம் அதிர்ச்சி தகவல்

திருவள்ளூர் மாவட்டம் ஈகுவார்பாளையத்தில் நடந்த அரசு விழாவில் வட்டாட்சியர் கண்ணன் அவர்களுக்கு இருக்கை வழங்காதது இந்த அரசின் சாதிய வன்மத்தின் உச்சம்.

அவர் பட்டியலினத்தைச் சேர்ந்தவர் என்பதால் தான் இருக்கை வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. (1/3)

— K.Annamalai (@annamalai_k)

இதுகுறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றினை வெளியிட்டு உள்ளார். அதில், ‘திருவள்ளூர் மாவட்டம் ஈகுவார்பாளையத்தில் நடந்த அரசு விழாவில் வட்டாட்சியர் கண்ணன் அவர்களுக்கு  இருக்கை வழங்காதது இந்த திமுக அரசின் சாதிய வன்மத்தின் உச்சம்.  அவர் பட்டியலினத்தைச் சேர்ந்தவர் என்பதால் தான் இருக்கை வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. 

அந்த விழாவில் துணை வட்டாட்சியர், சட்டமன்ற உறுப்பினர் அதுமட்டுமின்றி அங்கு வந்திருந்த திமுகவினருக்குக் கூட இருக்கை வழங்கப்பட்டது. ஆனால், அரசு பிரதிநிதி ஒருவருக்கு இருக்கை இல்லை. சமூகநீதி, சமத்துவம் எனப் போகும் இடமெல்லாம் தம்பட்டம் அடிக்கும் திமுகவின் முகத்திரைக்குப் பின்னால் இருக்கும் சாதிய கோட்பாட்டை இந்த நிகழ்வும் வெட்ட வெளிச்சமாக்கியுள்ளது’ என்று கூறியுள்ளார்.

மேலும் செய்திகளுக்கு..வேறு நபருடன் உடலுறவு.. ஆண்களை முந்திய பெண்கள் - ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்

click me!