இதை மட்டும் சொல்லி பாருங்க... திமுக கூட்டணி டமார்தான்... பொடி வைத்து பேசும் பொன். ராதாகிருஷ்ணன்..!

By Asianet TamilFirst Published Sep 23, 2020, 8:27 PM IST
Highlights

திமுக தலைவரை தவிர வேறு யாரையாவது முதல்வர் வேட்பாளராக அறிவித்தால், கூட்டணி சிதறு தேங்காய் போல உடைந்துவிடும் என்று பாஜக மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

பாஜக மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான பொன்.ராதாகிருஷ்ணன் திருநெல்வேலியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “அதிமுக கூட்டணியில் பாஜக உள்ளது. வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக அங்கம் வகிக்கும் கூட்டணிதான் தமிழகத்தில் ஆட்சியை அமைக்கும். தேமுதிக கிங்காக இருக்கபோவதாக சொல்கிறார்கள். அதற்கு வாழ்த்துகள். அவர்கள் தங்கள் தன்னம்பிக்கை மூலம் கட்சியை நடத்துகிறார்கள்.
எதிர்க்கட்சிகளிடம் முதல்வர் வேட்பாளருக்கு பஞ்சம் உள்ளது. திமுக தலைவரை தவிர வேறு யாரையாவது முதல்வர் வேட்பாளராக அறிவித்தால், கூட்டணி சிதறு தேங்காய் போல உடைந்துவிடும். கன்னியாகுமரி தொகுதி இடைத்தேர்தலில் பாஜகவே போட்டியிடும். சட்டப்பேரவைத் தேர்தல் பணிகளை ஏற்கனவே தொடங்கிவிட்டோம். ஆனால், துரதிர்ஷ்டவசமாக இப்போது கன்னியாகுமரியில் இடைதேர்தல் வந்துவிட்டது. அதற்கான பணியை நான் தொடங்கிவிட்டேன். விவசாயம் பற்றி மு.க. ஸ்டாலினுக்கு எதுவும் தெரியாது. அவர் முதல்வர் குறித்து கருத்துக்கூற எந்த அருகதையும் இல்லை” என்று பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
 

click me!