டிடிவி  மீட்டிங் சுவர் விளம்பரத்துக்கு தடை போட்ட போலீஸ் ! கரூரில் செந்தில் பாலாஜி கைது!!

Asianet News Tamil  
Published : Jan 27, 2018, 06:12 PM ISTUpdated : Sep 19, 2018, 01:52 AM IST
டிடிவி  மீட்டிங் சுவர் விளம்பரத்துக்கு தடை போட்ட போலீஸ் ! கரூரில் செந்தில் பாலாஜி கைது!!

சுருக்கம்

Ban Wall advertisement ttv meeting senthil balaji arrest

சுவர் விளம்பரத்திற்கு அனுமதி மறுத்ததால் முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் செந்தில் பாலாஜி உட்பட 47 பேர் கைது செய்யப்பட்டனர்.

கரூரில் டிடிவி தினகரன் தலைமையில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு கொண்டாட போலீசார் அனுமதி மறுத்த நிலையில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் விழாவிற்கு அனுமதி வழங்கியது

இதனை தொடர்ந்து 29ம் தேதி டிடிவி தினகரன் தலைமையில் கரூரில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட உள்ளது.

இந்த பொதுக் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கும் வகையில் வெங்கமேடு மேம்பாலத்தில் சுவர் விளம்பரம் செய்து வந்தனர். அங்கு வந்த போலீசார் அனுமதி இல்லாமல் விளம்பரம் எழுதக் கூடாது என்றும் நீதிமன்ற உத்தரவு எங்களுக்கு வரவில்லை என கூறி சுவர் விளம்பரம் எழுதுவதை தடுத்து நிறுத்தினர்

இதனையடுத்த அங்கு வந்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டார். பின்னர் அவரது ஆதராவாளர்களுடன் சாலை மறியலில் ஈடுப்பட்டதால் செந்தில் பாலாஜியையும், அவரது ஆதரவாளர்களையும் போலீசார் கைது செய்தனர்.

PREV
click me!

Recommended Stories

சீட்டு வாங்கி கொடுத்த ஓபிஎஸ்க்கு ஆப்பு வைத்த எம்பி தர்மர்..! மீண்டும் அதிமுகவில் ஐக்கியம்..
பாஜக அரசுக்கு ஆதரவு... என் முடிவில் மன்னிப்பு கேட்க மாட்டேன்.. காங்கிரஸ் கட்சிக்கு சசி தரூர் பதிலடி..!