"ஓபிஎஸ் கார் மீது கல் வீச்சு... கண்ணாடி உடைப்பு" - ஆண்டிப்பட்டியில் பரபரப்பு

Asianet News Tamil  
Published : Mar 17, 2017, 04:24 PM ISTUpdated : Sep 19, 2018, 02:42 AM IST
"ஓபிஎஸ் கார் மீது கல் வீச்சு... கண்ணாடி உடைப்பு" - ஆண்டிப்பட்டியில் பரபரப்பு

சுருக்கம்

attack on ops car

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டிக்குச் சென்ற முன்னாள் முதல் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்த முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கார் கண்ணாடி உடைக்கபட்டதால் ஆண்டிப்பட்டியில் பரபரப்பான சூழல் நிலவுகிறது. 

தேர்தல் ஜூரம் தகிக்கும் சூழலில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலுக்கு குடும்பம் சகிதமாகச் சென்ற ஓ.பி.எஸ். அங்கு பிராத்தனை நடத்தி விட்டு தனது சொந்த தொகுதியான ஆண்டிப்பட்டிக்குச் சென்றார். 

அண்ணாசிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின் காரில் ஓ.பி.எஸ். சென்று கொண்டிருந்தார். அப்போது மர்ம நபர்கள் சிலர் திடீரென கல்வீசி தாக்குதல் நடத்தினர். இதில் காரின் கண்ணாடி உடைந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

ஓ.பி.எஸ்.மீது தாக்குதல் நடத்த முயற்சித்த சம்பவம் தேனி மாவட்டத்தில் பெரும் பரபரப்பையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி உள்ளது. 

PREV
click me!

Recommended Stories

Udhayanidhi vs CM Vijay: சனாதனத்தை மீண்டும் சீண்டிய உதயநிதி.. ஜோதிடருக்கு அரசு பதவி கொடுத்த விஜய்.. மோதல் ஆரம்பம்!
TN Politics: திமுக-அதிமுக கூட்டணி பேச்சு.. பின்னணியில் அவரா? திருமாவளவன் சொன்ன ஷாக் நியூஸ்!