காங்கிரஸ் வேட்பாளர் மீது கொலை வெறி தாக்குதல்..? அதிமுக வேட்பாளர் மீது தேர்தல் ஆணையத்தில் புகார்.

By Ezhilarasan BabuFirst Published Mar 23, 2021, 3:10 PM IST
Highlights

வேளச்சேரி காங்கிரஸ் கட்சி வேட்பாளர் மீது அதிமுக வேட்பாளர் கொலைவெறி தாக்குதல் நடத்தியதாக காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 

வேளச்சேரி காங்கிரஸ் கட்சி வேட்பாளர் மீது அதிமுக வேட்பாளர் கொலைவெறி தாக்குதல் நடத்தியதாக காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சென்னை வேளச்சேரி சட்டப்பேரவை தொகுதியில் திமுக கூட்டணியில் போட்டியிடம்  காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஹசன் மெளலான கடந்த 21ம் தேதி பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, அதிமுக வேட்பாளரால் தாக்கப்பட்டதாக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று தலைமை தேர்தல் அதிகாரியிடம் காங்கிரஸ் கட்சி சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டது.  

இந்த புகார் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அக்கடசியின் துணைத தலைவர் தமோதரன், ஆளும் கட்சியினர் காவல் துறை உதவியுடன், காங்கிரஸ் வேட்பாளர் மீது கொலை வெறி தாக்குதலில் ஈடுபட்டதாகவும், எனவே வேட்பாளருக்கு போலிஸ் பாதுகாப்பு வழங்கவேண்டும் என்றார். மேலும்,  மூன்று ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணியாற்றும் காவல் அதிகாரிகளை மாற்ற வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார். 

மேலும், காங்கிரஸ் கட்சி போட்டியிடக்கூடிய 25 தொகுதிகளிலும் வேட்பாளர்களுக்கு துணை ராணுவ படை பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும் என்றும், அந்த மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது. அதேபோல், வாக்குப்பதிவு மற்றும் வாக்கு எண்ணிக்கையின் போது, 100 சதவிகிதம் வீடியோ பதிவு செய்ய வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

click me!