அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்க விருப்பமில்லை என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்க விருப்பமில்லை என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுக்குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இதர பிற்படுத்தப்பட்டோர், பட்டியலினத்தோர், பழங்குடியினர் அல்லாத பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பினருக்கு (EWS) அரசியல் அமைப்பு சட்டத்தில் 103 வது திருத்தத்தின் மூலமாக 2019ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 10 சதவீத இடஒதுக்கீட்டை மத்திய பாஜக அரசு வழங்கியது. இதனை எதிர்த்து பல மாநில உயர் நீதிமன்றங்களிலும், உச்ச நீதிமன்றத்திலும் திமுக உட்பட பலர் வழக்கு தொடர்ந்தனர். உச்ச நீதிமன்றம் அனைத்து மனுக்களையும் 2019ஆம் ஆண்டு மார்ச் மாதம் விசாரணைக்கு ஏற்று கொண்டு அனைத்து தரப்பு வாதங்களை கேட்டுக்கொண்ட பின் இந்த வாரம் 7 ஆம் தேதி தீர்ப்பை வெளியிட்டது. இதர பிற்படுத்தப்பட்டோர்,பட்டியிலினத்தோர், பழங்குடியினர் அல்லாத பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பினருக்கு அரசியல் அமைப்பு சட்டத்தில் கொண்டுவரப்பட்ட 103வது திருத்தம் செல்லும் என்று ஐவர் நீதிபதிகள் அமர்வில் மூன்று நீதிபதிகள் தெரிவித்ததால், இடஒதுக்கீட்டுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட செய்யப்பட்டது.
இதையும் படிங்க: சிறைத்தண்டனையை நிறுத்திய நீதிமன்றம்.. ஆனால், 4 வழக்குகளில் மீண்டும் கைது செய்யப்பட்ட சவுக்கு சங்கர் !
அனைத்து மனுக்களும் தள்ளுபடி வழக்கம் போல் திமுக தலைவர், திமுக கட்சி தொண்டர்கள் மற்றும் அவர்களது தோழமை கட்சியில் பெரும்பாலானோர் இந்த தீர்ப்புக்கு எதிராக கடுமையான கருத்துக்களை முன்வைத்து கொண்டிருக்கிறார்கள். தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பினருக்கு வழங்கப்பட்ட 10 சதவீத இடஒதுக்கீட்டை ஆதரித்து அறிக்கை வெளியிட்டிருந்தார். கேரளாவில் கம்யூனிஸ்ட் கட்சி EWS இட ஒதுக்கீட்டை இரண்டு வருடங்களுக்கு முன்பே அமல்படுத்திவிட்டது, ஆனால் தமிழகத்தில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இந்த இடஒதுக்கீட்டுக்கு எதிராக குரல் கொடுக்கின்றனர். திமுகவிடம் நாவை அடகு வைத்து பிழைப்பை நடத்தும் கம்யூனிஸ்ட் கட்சிகளிடம் வேறு என்ன எதிர்பார்க்க முடியும்? திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலினுக்கு சிலவற்றை தெளிவுபடுத்த விரும்புகிறோம்.
இதையும் படிங்க: எடப்பாடி Vs ஓபிஎஸ்! இருவரையும் சந்திக்காத பிரதமர் மோடி - வெளியான அதிர்ச்சி காரணம் !
1. ஆண்டு வருமானம் ரூ 8 லட்சம் குறைவாக இருக்க வேண்டும்.
2. ஐந்து ஏக்கருக்கு கீழ் விவசாய நிலம் இருக்க வேண்டும்.
3. 1,000 சதுர அடிக்கு கீழ் உள்ள வீட்டில் குடியிருக்க வேண்டும், நகராட்சி மற்றும் மாநகராட்சிகளில் 100 கெஜத்துக்கு மேல் நிலம் இருக்க கூடாது, மற்ற பகுதிகளில் 200 கெஜத்துக்கு மேல் நிலம் இருக்க கூடாது.
தமிழகத்தில் EWS இட ஒதுக்கீட்டின் மூலமாக ரெட்டியார், நாயுடு, பிள்ளை முதலியார், பிராமணர்கள், மலங்கரா கிறிஸ்தவர்கள், தாவூத் மற்றும் மீர் இஸ்லாமியர்கள் போன்ற 79 சமூகத்தினர் பயன்பெறுவார்கள் அனைத்து தரப்பட்ட மக்களின் நலனில் அக்கறை கொண்ட ஒரே கட்சி பாரதிய ஜனதா கட்சி மட்டும் தான்.
நாளை நடைபெறவிருக்கும் அனைத்து கட்சி கூட்டம் நாடகத்தில் நடிகர்களாக பங்கேற்க தமிழக பாரதிய ஜனதா கட்சிக்கு விருப்பமில்லை. திமுகவை போல் போலியாக வேஷமணிந்து எங்களுக்கு நடிக்க தெரியாது. ஆகவே நாளை நடைபெறவுள்ள அனைத்து கட்சி கூட்டத்தை தமிழக பாரதிய ஜனதா கட்சி புறக்கணிக்கிறது என்பதை இந்த அறிக்கையின் வாயிலாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு தெரிவித்துக் கொள்கிறோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.