தருமபுரி மாவட்டத்தில், கருத்தரங்கு ஒன்றில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய பா.ம.க இளைஞர் அணி தலைவர் அன்புமணி, தமிழிசையுடன் ஒப்பிட்டு யார் அறிவாளி என விவாதம் செய்வது சிறுபிள்ளை தனம் என கூறினார்.
அரசியலில் கத்துகுட்டி போல் செயல் படுவதாகவும். உருப்புடியாக பேச கூட தெரியவில்லை, தேசிய கட்சியின் மாநில தலைவராக இருந்தும் அதனை சரியாக தமிழிசை செயல்படுத்த வில்லை என குற்றம் சாட்டினார். இதைதொடர்ந்து பேசிய இவர் சேலம் 8 வழி சாலை பற்றியும் விரிவாக பேசியுள்ளார்.