அவருக்கு திட்ட மட்டும்தான் தெரியும் ! திட்டங்கள் பத்தி தெரியாது !! ஸ்டாலினை கிழித்து தொங்கவிட்ட அன்புமணி !!

By Selvanayagam PFirst Published Apr 3, 2019, 7:29 AM IST
Highlights

அதிமுக அணிக்கு நல்லத் திட்டங்களை மக்களுக்குக் கொடுக்க மட்டுமே  தெரியும் என்றும் ஆனால் ஸ்டாலினுக்கு திட்ட மட்டுமே தெரியுமே தவிர நல்ல திட்டங்கள் குறித்து எதுவும் தெரியாது என்றும் பாமக அன்புமணி தெரிவித்துள்ளார்.
 

மத்திய சென்னை பாமக வேட்பாளர் சாம் பாலை ஆதரித்து சூளைமேட்டில் அன்புமணி ராமதாஸ் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர்,  மத்திய சென்னையில் போட்டியிடும் தயாநிதி மாறன் பெரும் பணக்காரர். மத்திய சென்னையில் காலி குடங்களோடு நிற்கும் பெண்களைப் பார்த்ததாக அவர் பேசியுள்ளார். 

10 ஆண்டுகளாக இந்தத் தொகுதியில் மக்களவை உறுப்பினராக அவர் இருந்துள்ளார். அப்போது குடிநீர்ப் பிரச்னையைத் தீர்க்க நடவடிக்கை எடுத்திருந்தால், காலி குடங்களோடு யாரும் நின்றிருக்க மாட்டார்கள் என கூறினார்.
.
நல்லத் திட்டங்களை மக்களுக்குக் கொடுக்க மட்டுமே அதிமுக அணியில் உள்ள கட்சிகளுக்குத் தெரியும். ஆனால், மு.க.ஸ்டாலினுக்குத் திட்ட மட்டுமே தெரிகிறது. நல்ல திட்டங்களைப் பற்றித் தெரியவில்லை. மு.க.ஸ்டாலின் தனிநபர் விமர்சனத்தில்தான் அதிகம் ஈடுபடுகிறார். அதிமுகவை விட பாமக மீது இப்போது அதிக விமர்சனம் செய்கிறார் என அன்புமணி குறிப்பிட்டார்.

திமுகவுடன் கூட்டணி வைக்க பாமகவை அழைத்தனர். பாமக செல்லவில்லை. அதனால், பாமகவை ஸ்டாலின் கடுமையாக விமர்சனம் செய்கிறார். 

கோதாவரி - காவிரி இணைப்புத் திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. கோதாவரி ஆற்றில் 3 ஆயிரம் டிஎம்சி நீர் உள்ளது. இதில், 1,500 டிஎம்சி நீர் வீணாக கடலில் கலக்கிறது. இதில், ஆயிரம் டிஎம்சி நீரை காவிரி ஆற்றில் திருப்பிவிடும் திட்டம் இது. இதன் மூலம் தமிழகத்துக்கு 200 டிஎம்சி நீர் கிடைக்கும். காவிரியிலிருந்து தமிழகத்துக்கு 177.25 டிஎம்சி நீர்தான் கிடைக்கிறது.

 இந்த திட்டத்துக்காக 65 ஆயிரம் கோடி ரபாயை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. இந்த திட்டம் மட்டும் நிறைவேற்றப்பட்டால் தமிழகத்தில் இனி தண்ணீர் பஞ்சமே இருக்காது என்றும் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.

click me!