அமமுக வழக்கறிஞர் மீது ரத்தம் சொட்ட சொட்ட கொலைவெறி தாக்குதல்.. கொந்தளிக்கும் டிடிவி.தினகரன்..!

By vinoth kumarFirst Published Sep 3, 2021, 1:38 PM IST
Highlights

சமூக விரோதிகள் மீது காவல்துறையினர் உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன். படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முருகானந்தம் விரைவில் முழு நலம் பெற்று வர பிரார்த்தனை செய்கிறேன்

மானாமதுரை அருகே அமமுக மாநில வழக்கறிஞர் குரு.முருகானந்தம் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தியதற்கு டிடிவி.தினகரன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே ராஜகம்பீரத்தை சேர்ந்தவர் குரு.முருகானந்தம். இவர் அமமுக மாநில வழக்கறிஞர் பிரிவு துணை செயலாளர் பொறுப்பு வகித்து வருகிறார்.

இந்நிலையில், மானாமதுரை நீதிமன்றம் அருகே சிவகங்கை சாலையில் உள்ள தனது அலுவலகத்தில் குரு.முருகானந்தம் இருந்த போது, இரண்டு இரு சக்கர வாகனத்தில் வந்த 4 பேர் அரிவாள்களுடன் அலுவலகத்திற்குள் கண்ணாடியை உடைத்து  குரு.முருகானந்தத்தை தலை, கை உள்ளிட்ட இடங்களில் சரமாரியாக அரிவாளால் வெட்டி விட்டு தப்பி சென்றனர். இதனையடுத்து, ரத்தம் சொட்ட சொட்ட அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். இந்த சம்பவத்திற்கு டிடிவி.தினகரன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- கழக வழக்கறிஞர் பிரிவு துணைச் செயலாளர் குரு. முருகானந்தம் மீது மானாமதுரையில் நடத்தப்பட்ட கொலைவெறித் தாக்குதலுக்கு கடும் கண்டனத்தைத்  தெரிவித்துக்கொள்கிறேன்.

இதற்குக் காரணமான சமூக விரோதிகள் மீது காவல்துறையினர் உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன். படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முருகானந்தம் விரைவில் முழு நலம் பெற்று வர பிரார்த்தனை செய்கிறேன் என்று பதிவிட்டுள்ளார். 

click me!