இதற்கெல்லாம் திமுக விலைகொடுத்தே அக வேண்டும்.. ஸ்டாலினுக்கு எச்சரிக்கை விடுத்த பார்வர்ட் பிளாக்.

By Ezhilarasan BabuFirst Published Feb 20, 2021, 11:55 AM IST
Highlights

முத்துராமலிங்க தேவரை கொலைகாரன் என விமர்சித்த தங்களின் கூட்டணி கட்சியான விடுதலை சிறுத்தைகள் கட்சியை திமுக தலைவர் மு.க ஸ்டாலின் கண்டிக்க வேண்டும் என அகில இந்திய பார்வர்ட் பிளாக் மாநில பொதுச்செயலாளர் மகேஸ்வரன் வலியுறுத்தியுள்ளார்.  

முத்துராமலிங்க தேவரை கொலைகாரன் என விமர்சித்த தங்களின் கூட்டணி கட்சியான விடுதலை சிறுத்தைகள் கட்சியை திமுக தலைவர் மு.க ஸ்டாலின் கண்டிக்க வேண்டும் என அகில இந்திய பார்வர்ட் பிளாக் மாநில பொதுச்செயலாளர் மகேஸ்வரன் வலியுறுத்தியுள்ளார். இது நேதாஜி தேவர் தொண்டர்களின் எச்சரிக்கை எனவும் அவர் கூறியுள்ளார்.

சமீபத்தில் தனியார் யூட்யூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி கொடுத்தார் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர்களில் ஒருவரான வன்னியரசு, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானின் அரசியலை விமர்சித்திருந்தார். அதில் பேசிய அவர், நாம் தமிழர் கட்சியின்  ஒருங்கிணைப்பாளர் சீமான், முத்துராமலிங்க தேவருக்கு போஸ்டர் ஒட்டுகிறார், அதேபோல் இமானுவேல் சேகரனின் குருபூஜைக்கு அஞ்சலி செலுத்துகிறார், இதில் தான் நாங்கள் மாறுபடுகிறோம். 

அதாவது இமானுவேல் சேகரனை கொலை செய்த தேவருக்கும் அஞ்சலி, கொலையுண்ட இமானுவேல்சேகரனுக்கும் அஞ்சலி செலுத்தும் சீமானின் இந்த நடவடிக்கையில் இருந்து நாங்கள் முரண் படுக்கிறோம், கொலைக்குற்றம் செய்வோருக்கும் மரியாதை, கொலையுண்ட வருக்கும் மரியாதை, எப்படி இருவரையும் சமதளத்தில் வைத்து பார்க்க முடியும் என கேள்வி எழுப்பி உள்ளார். அதேபோல் சாதி பெருமை குறித்து முத்துராமலிங்க தேவர் பேசியதற்கான ஆதாரங்கள் உள்ளது எனவும் அவர் விமர்சித்தார். இந்நிலையில்  வன்னி அரசுவின் இந்த பேச்சை மேற்கோள்காட்டி பாஜக தலைவர்களில் ஒருவரான எச். ராஜா தேவர் பெருமகனாரை இழிவு செய்த விடுதலை சிறுத்தைகளின் துணைப் பொதுச்செயலாளர் வன்னியரசுவை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி உள்ளார். இந்நிலையில் முக்குலத்தோர் சமுதாயத்தை சேர்ந்த அரசியல் அமைப்புகள் வன்னி அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். 

அந்த வரிசையில் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் அவர்களுக்கு நேதாஜி தேவர் தொண்டர்களின் எச்சரிக்கை கடிதம் என்ற பெயரில் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் மகேஸ்வரன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தங்களின் கூட்டணி கட்சியான விடுதலை சிறுத்தைகள் எல்லை கடந்து கீழ்த்தரமான அரசியல் செய்து வருகின்றனர். இமானுவேல் கொலை நேரு காமராஜரின் காங்கிரஸ் அரசு அரங்கேற்றிய அரசியல் படுகொலைகள் என்பது அரசியல் அறிந்த அனைவருக்கும் தெரியும். இமானுவேல் கொலை என்பது எங்கள் பசும்பொன் தேவரின் புனித தியாக வாழ்வின் பெரும் புகழை இழிவுபடுத்த காமராஜரின் காங்கிரஸ் அரசால் நிகழ்த்தப்பட்ட மறக்கவும் மன்னிக்கவும் முடியாத ரத்தக்கரை படிந்த வரலாறு. 

நாட்டின் விடுதலைக்காக ரத்தம் சிந்திய தேசியத் தலைவர் பசும்பொன் தேவரை கொச்சைப்படுத்தும் விதமாக பேசி வரும் விடுதலை சிறுத்தைகள் அமைப்பை கூட்டணியின் தலைவர் என்ற முறையில் மு.க ஸ்டாலின் அவர்கள் கண்டிக்க வேண்டும். கண்டிக்க தவறினால் விடுதலை சிறுத்தைகள் அமைப்பின் சிறுபிள்ளைத்தனமான பாவ அரசியலுக்கு திமுகதான் சிலுவை சுமக்க வேண்டிவரும் என எச்சரிக்கிறோம். என அதில் கூறப்பட்டுள்ளது. 
 

click me!