இன்று அஞ்சாநெஞ்சன் மு.க.அழகிரிக்கு பிறந்தநாள். ஆனால், ‘’'அப்பா மறைந்த கவலையிலிருந்து நான் மீளவில்லை. யாரும் என்னை பார்க்க வரவேண்டாம்’’ என தனது ஆதரவாளர்களுக்கு கட்டளையிட்டிருக்கிறார்.
இன்று அஞ்சாநெஞ்சன் மு.க.அழகிரிக்கு பிறந்தநாள். ஆனால், ‘’'அப்பா மறைந்த கவலையிலிருந்து நான் மீளவில்லை. யாரும் என்னை பார்க்க வரவேண்டாம்’’ என தனது ஆதரவாளர்களுக்கு கட்டளையிட்டிருக்கிறார்.
அழகிரியின் ஆள் உயர கட் அவுட்டிற்கு பாலபிஷேகம் நடக்கும். முருகன் கோவில், மாரியம்மன் கோவில்களில்தான் நேர்த்திக்கடனுக்காக அலகு குத்துவார்கள். சாரட்டு வண்டிகள் சரசரக்க முத்தாய்ப்பாக ராஜா முத்தையா மண்டபத்தில் நடக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்று ஊர்வன, பறப்பன, நடப்பன என அனைத்து வகையான அசைவ விருந்து வகைகளையும் தனது ஆதரவாளர்களுக்கு படைத்து விட்டு வீடு திரும்புவார் அழகிரி. மதுரையையே குலுங்க குலுங்க வைத்து பிறந்தநாள் கொண்டாடிய அழகிரி இப்போது கலங்கி கலங்கி தவிக்கிறார்.
அவரது 68வது பிறந்த நாள் இன்று. ஆனால், இன்றைய அழகிரி பிறந்த நாளில் எந்தவித ஆர்ப்பாட்டமும் இல்லை. களையிழந்து கிடக்கிறது மதுரை. கருணாநிதி மறைவுக்கு பிறகு திமுகவில் இருந்து ஓரம்கட்டப்பட்ட அழகிரி மதுரை வீட்டை விட்டு பெரும்பாலும் வெளியேறுவதே இல்லை. சில ஆதரவாளர்களை மட்டும் அவ்வப்போது சந்தித்து வருகிறார். இந்நிலையில் அவரது பிறந்த நாளான இன்று ‘’ அப்பா மறைந்த கவலையிலிருந்து இன்னும் நான் மீளவில்லை. அதனால், என் பிறந்தநாள் விழாவைக் கொண்டாட விரும்பவில்லை. எங்கேயும் என்னை வாழ்த்தி விளம்பரங்கள் வைக்க வேண்டாம்.