அதிமுகவுக்கு அடுத்த அதிர்ச்சி !! எஸ்.பி வேலுமணி உட்பட 9 எம்.எல்.ஏக்கள் மீது போலீசார் வழக்கு.. கோவை பரபர !!

Published : Feb 20, 2022, 10:02 AM IST
அதிமுகவுக்கு அடுத்த அதிர்ச்சி !! எஸ்.பி வேலுமணி உட்பட 9 எம்.எல்.ஏக்கள் மீது போலீசார் வழக்கு.. கோவை பரபர !!

சுருக்கம்

கோவை கலெக்டர் ஆபீசில் தர்ணாவில் ஈடுபட்டு அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி உள்ளிட்ட 9 அதிமுக எம்எல்ஏக்கள் மீது 3 பிரிவுகளில் வழக்கு பதிந்துள்ளனர்.

கோவை மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வெளியூரிலிருந்து அழைத்து வரப்பட்ட நபர்கள் பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் சப்ளை செய்வதாக அதிமுகவினர் புகார் தெரிவித்து வந்தனர். உள்ளாட்சி தேர்தலில் வெளியூரில் இருந்து அழைத்து வரப்பட்ட நபர்கள் பணம் , பரிசு பொருட்கள் சப்ளை செய்வதாக அதிமுகவினர் புகார் தெரிவித்து வந்தனர்.

வெளியூர் சேர்ந்தவர்களை வெளியேற்றவேண்டும் என வலியுறுத்தி அதிமுக முன்னாள் அமைச்சரும் , எம்எல்ஏவுமான எஸ்.பி வேலுமணி உட்பட 9 எம் எல்ஏக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலெக்டர் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தரையில் அமர்ந்து கோஷமிட்டு கடும் எதிர்ப்பு காட்டினர் போராட் டத்தை கைவிட மறுத்து அவர்கள் ஆவேசமாக பேசினர்.

இவர்களுடன் கோவை மாவட்ட கலெக்டர் சமீரன் , போலீஸ்துணை கமிஷனர் ஜெயச்சந்திரன் உள்ளிட் டோர் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போதும் போராட்டத்தை நிறுத்த வில்லை. வேலுமணி உட்பட அதிமுகவினர் அதே இடத்தில் படுத்தபடி எதிர்ப்பு காட்டினர்.

கோவை இதைத்தொடர்ந்து போலீசார் வேலுமணி மற்றும் எம்எல்ஏக்கள் பொள் ளாச்சி ஜெயராமன் , பி.ஆர்.ஜி அருண்குமார். அம்மன் அர்ஜூனன். ஏ.கே.செல் வராஜ், வி.பி.கந்தசாமி , கே.ஆர் ஜெயராமன் , அமுல் கந்தசாமி தாமோதரன் ஆகியோர் மீது ரேஸ்கோர்ஸ் போலீ சார் வழக்குப்பதிந்து செய்து கைது செய்தனர். அவர்கள் மீது சட்டவிரோதமாக ஒன்று கூடுதல் , தொற்று நோய் பரவல் தடுப்பு சட் டம் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் தற்போது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

'என்னை வெறி ஏத்தி விட்றாத'.. மீண்டும் செய்தியாளரிடம் சீறிய சீமான்! என்ன நடந்தது?
மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த புரட்சிக் கலைஞர்.. கேப்டன் விஜயகாந்துக்கு புகழாரம் சூட்டிய விஜய்!