
கடந்த 5 ஆம் தேதி முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா முதலமைச்சராவார் என பரவலாக பேசப்பட்டு அவர் பதவியேற்பதற்கான ஏற்பாடுகளும் தீவிரமாக நடைபெற்று வந்தன.
இதையடுத்து நேற்று இரவு பன்னீர்செல்வம் அதிரடியாகவும் சரவெடியாகவும் செய்தியாளர்கள் வழியாக சில கருத்துகளை மக்கள் முன் வைத்தார்.
அதில் தான் விருப்பட்டு பதவியை ராஜினாமா செய்யவில்லை எனவும், மிரட்டி வலுகட்டாயமாக ராஜினாமா செய்ய வைத்தார்கள் எனவும் வெடியை கொளுத்தி போட்டார்.
பன்னீரின் இத்தகைய பேட்டி கார்டன் வட்டாரத்தில் கொந்தளிப்பையும் பயத்தையும் ஏற்படுத்தியது.
இதையடுத்து அதிமுக பொதுசெயலாளர் சசிகலா, பன்னீர்செல்வம் திமுகவின் கூட்டாளியாக செயல்படுவதாக குற்றம் சாட்டியதோடு அவரை பொருளாளர் பதவியிலிருந்து நீக்கினார்.
மேலும் தனக்கான பலத்தை சட்டமன்றத்தில் நிரூபிப்பேன் எனவும் பொதுமக்களை வீடு வீடுவாக சென்று சந்திப்பேன் எனவும் தெரிவித்தார்.
சசிகலா தரப்பும் பன்னீரின் தரப்பும் மாறி மாறி பதிலடி கொடுத்துவருவது மக்களின் மனதில் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.
தற்போது சசிகலா ஆட்சியையை தக்கவைக்கவும் பதவி நாற்காலியை பிடிக்கவும் அமைச்சர்களுடனும் எம்.எம்.ஏக்களுடனும் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.
மறுபுறம் பன்னீர் தனக்கான பெரும்பான்மையை நிரூபிக்க களத்தில் இறங்கி மக்களோடு மக்களாக வேலை பார்த்து வருகிறார்.
இதனால் பன்னீர்செல்வத்திற்கும் ஆதரவு பெருகி கொண்டு தான் வருகிறது.
யார் பக்கம் அதிக சட்டமன்ற உறுபினர்கள் வரப்போகிறார்கள் என்பதையும் தாண்டி அதிமுக ஆட்சி அமைக்குமா என சந்தேகம் வலுத்துள்ளது.
ஒரு கட்சி ஆட்சி அமைக்க 119 எம்.எல்.ஏக்களின் ஆதரவு தேவை. இந்நிலையில் தற்போது உள்ள 134 தொகுதி எம்.எல்.ஏக்களின் ஆதரவு இரு தரப்பாக உடைந்துள்ளது.