வந்தோரை வாழ வைக்கும் சென்னையின் வயது 381... புகழ்ந்து தள்ளி ட்வீட் போட்ட முதல்வர் எடப்பாடி..!

Published : Aug 22, 2020, 11:41 AM IST
வந்தோரை வாழ வைக்கும் சென்னையின் வயது 381... புகழ்ந்து தள்ளி ட்வீட் போட்ட முதல்வர் எடப்பாடி..!

சுருக்கம்

வந்தோரை வாழ வைக்கும் சென்னை தோற்றுவிக்கப்பட்ட தினம் இன்று. கொரோனா பேரிடரில் இருந்தும் சென்னை விரைவில் மீண்டு வரும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

வந்தோரை வாழ வைக்கும் சென்னை தோற்றுவிக்கப்பட்ட தினம் இன்று. கொரோனா பேரிடரில் இருந்தும் சென்னை விரைவில் மீண்டு வரும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

தமிழ்நாட்டின் தலைநகரமாகிய சென்னை தோற்றுவிக்கப்பட்டதாகக் கருதப்படும் கி.பி. 1639 ஆகஸ்ட் 22ம் நாளை ஒவ்வொரு ஆண்டும் சென்னை தினமாக கொண்டாடி வருகிறோம்.  பல்வேறு நகரங்களில் வாழ்ந்து வரும் பல கோடி மக்களின் பல்வேறு கனவுகளில் சென்னைக்கு வர வேண்டும் என்ற கனவும் ஒன்று. தமிழகத்தின் பல மாவட்டங்களில் இளைஞர்கள் பட்டப்படிப்பை முடித்துவிட்டால் உடனே வேலை தேட வேண்டும் என்றால் அவர்களுக்கு ஞாபகம் வருவது சென்னை தான். லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளையும் வசதியையும் கொடுத்து அவர்கள் தங்களுடைய சொந்த ஊர் சென்னை என்று சொல்லும் அளவுக்கு அவர்களை மாற்றிவிடும். 

இந்நிலையில், சென்னை தோற்றுவிக்கப்பட்ட தினத்தையொட்டி  தமிழக  முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். அதில், வந்தோரை வாழ வைக்கும் தமிழகத்தின் தலைநகரான சென்னை தோற்றுவிக்கப்பட்ட தினம் இன்று!

 

கனவுகளோடு நாடி வருபவர்களுக்கு முகவரி தேடித்தந்த சென்னையின் வயது 381. பேரிடர்கள் பல கடந்து வந்த சென்னை, கொரோனா பேரிடரில் இருந்தும் விரைவில் மீண்டு வரும். இது நம்ம சென்னை! ” என்று பதிவிட்டுள்ளார்.

PREV
click me!

Recommended Stories

வ.உ.சிக்கு திமுக என்ன செய்தது.. எத்தனை இடத்தில் பெயர் வைத்தது? திருச்சி சிவாவுக்கு வ.உ.சி பேத்தி அதிரடி கேள்வி
விஜய் கை ஓங்கிவிடக்கூடாது..! வேகத்தைக் கூட்டும் பாஜக..! அண்ணாமலைக்கு முக்கியப் பொறுப்பு..!