5வது நாளாக நாடாளுமன்றத்தை அலறவிடும் அதிமுக எம்பிக்கள்!! பதற்றத்தில் பாஜக

Asianet News Tamil  
Published : Mar 09, 2018, 11:04 AM ISTUpdated : Sep 19, 2018, 02:03 AM IST
5வது நாளாக நாடாளுமன்றத்தை அலறவிடும் அதிமுக எம்பிக்கள்!! பதற்றத்தில் பாஜக

சுருக்கம்

admk mps protest in parliament insist to form cauvery management board

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி 5வது நாளாக அதிமுக எம்பிக்கள் நாடாளுமன்ற வளாகத்தில் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

உச்சநீதிமன்ற இறுதி தீர்ப்பின்படி, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என தமிழக எம்பிக்கள், நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் கடந்த 4 நாட்களாக அமளியில் ஈடுபட்டனர். ஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கி கூடுதல் நிதி ஒதுக்கக்கோரி தெலுங்குதேசம் கட்சி எம்பிக்களும், மற்ற கோரிக்கைகளை வலியுறுத்தி காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்களும் அமளியில் ஈடுபட்டதால் கடந்த 4 நாட்களாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் முடங்கின.

பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு தொடங்கியதிலிருந்தே நாடாளுமன்ற நடவடிக்கைகள் எதுவும் நடைபெறவில்லை.

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக தமிழகம், கர்நாடகா, கேரளா, புதுச்சேரி ஆகிய 4 மாநில அரசுகளுடன் மத்திய அரசு இன்று ஆலோனை நடத்துகிறது. இதற்கிடையே 5வது நாளாக இன்றும் நாடாளுமன்ற வளாகத்தில் அதிமுக எம்பிக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இரு அவைகளிலும் இன்றும் அமளியில் ஈடுபட வாய்ப்புள்ளதால், 5வது நாளாக இன்றும் நாடாளுமன்றம் முடங்கும் நிலை உள்ளது. 
 

PREV
click me!

Recommended Stories

தேர்தலுக்கு பின் அன்புமணி பூஜ்ஜியமாவார் - ராமதாஸ் முன்னிலையில் கொந்தளித்த அருள்
திமுக ஆட்சி மீது காங்கிரஸ் பகீர் அட்டாக்..! தவெகவில் 50 சீட்..! ராகுல் காந்தியின் தமிழக வியூகம்..!