விரைவில் அதிமுக பொது செயலாளர் பற்றி அறிவிக்கப்படும் - பொன்னையன் பரபரப்பு பேட்டி

First Published Dec 10, 2016, 11:16 AM IST
Highlights


ராயபேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் செய்தி தொடர்பாளார் பொன்னையன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அதிமுக ஆலமரம் போல் வளர்ந்த கட்சி என்றும் ஒற்றுமை உணர்வுடனும் கட்டுகோப்புடனும் ஒழுக்க நெறியுடனும் அதிமுகவை ஜெயலலிதா வளர்த்திருக்கிறார்.

ஜெயலலிதாவின் மாரைவுக்கு பிறகு பொது செயலாளர் யார் என்பது குறித்து உலா வரும் வதந்திகள் உண்மையற்றவை என்றார்.

அரசியல் காரணங்களுக்காக பொய்யான செய்திகள் பரப்பப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்ட பொன்னையன் தொண்டர்களையும் மக்களையும் காக்க கூடியோ ஒருவர் கழகத்தின் பொதுசெயலாளராக தேர்ந்தெடுக்கபடுவார் என பொன்னையன் உறுதிபட தெரிவித்தார்.

அதிமுகவில் வெற்றிடம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று தெரிவித்த பொன்னையன் இக்கட்சிக்கு பாஜக நெருக்கடி தருகிறது என்பதில் சற்றும் உண்மையில்லை என்றார்.

click me!