திமுகவில் நடக்கப்போகும் அதிரடி மாற்றம்... வரிசை கட்டும் சீனியர்கள்..!

By Thiraviaraj RMFirst Published Mar 21, 2020, 1:23 PM IST
Highlights

, முக்குலத்தோர், நாடார், முதலியார், முத்தரையர், உடையார், நாயுடு, முஸ்லிம் என பல, 'மாஜி'க்கள் மத்தியில், துணை பொதுச் செயலர் பதவியை பிடிக்க போட்டி நிலவுகிறது. 

தி.மு.க., பொதுச் செயலர் பதவிக்கு துரைமுருகனுக்கு அறிவிக்கப்பட்டு விட்டது. அதே நேரம், பொருளாளர் பதவிக்கு, டி.ஆர்.பாலு, கனிமொழி, பெரியசாமி, கே.என்.நேரு, பொன்முடி, எ.வ.வேலு, ஆ.ராசா என பலரும் வரிசை கட்டி நிற்கிறார்கள். இப்போது, கட்சியின் துணை பொதுச் செயலர்களாக, பெரியசாமி, வி.பி.துரைசாமி, சுப்புலட்சுமி ஜெகதீசன் என மூன்று பேர் இருக்கிறார்கள். 

துணை பொதுச் செயலர் பதவிகளை இன்னும் அதிகப்படுத்தி, ஜாதி அடிப்படையில சிலரை நியமிக்க, திமுக தலைமை திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இதனால், முக்குலத்தோர், நாடார், முதலியார், முத்தரையர், உடையார், நாயுடு, முஸ்லிம் என பல, 'மாஜி'க்கள் மத்தியில், துணை பொதுச் செயலர் பதவியை பிடிக்க போட்டி நிலவுகிறது. 

click me!